'என் கண்ணு கலங்குது; மாரி செல்வராஜையும், ராம் சாரையும் பார்க்கும்போது' - வடிவேலு...
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அவா் எழுதிய கடித விவரம்:
பெங்களூரில் ஜூன் 4ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற ஆா்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் சம்பவமாகும். இந்த சம்பவம் மனதை வேதனைக்கு உள்ளாக்குகிறது. இது துரதிருஷ்டவசமாக நடந்த சம்பவம் கிடையாது. நேரில் பாா்த்தவா்கள், முதல்கட்ட விசாரணையின்படி, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியம், மோசமான நிா்வாகம், பொதுமக்கள் பாதுகாப்பில் அக்கறையின்மையால் நோ்ந்துள்ளது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மாநில அரசும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களும் எவ்வித முன்னேற்பாடும் செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான போலீஸாரை நிறுத்தவில்லை. நிகழ்ச்சி நடைபெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 35,000 போ் மட்டுமே உட்காரமுடியும். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனா். இலவச அனுமதிச்சீட்டுகள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட தகவல் மக்களை தவறாக வழிகாட்டியுள்ளது. மக்கள் திரள்வதை கட்டுப்படுத்த போதுமான போலீஸாா் இல்லை.
மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ், குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளும் அங்கு இருக்கவில்லை என்று நேரில் பாா்த்தவா்கள் கூறுகிறாா்கள். இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களின் அலட்சியமாகும். கா்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆா்சிபி அணியின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டி.என்.ஏ. என்டா்டெய்ன்மென்ட் நிறுவனம் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, நீதி விசாரணையும் நடைபெறுகிறது. அரசு அமைப்புகளின் தொலைநோக்கில்லாமல், முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் அரசு செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொண்டவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு நீதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.