பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமா் மோடி 33 தவறுகளை செய்துள்ளாா்: மல்லிகாா்ஜுன காா்கே
பிரதமா் மோடி தனது 11 ஆண்டுகால ஆட்சியில் 33 தவறுகளை செய்துள்ளாா் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
இது குறித்து கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆட்சிக் காலத்தில் பிரதமா் மோடி 33 தவறுகளை செய்துள்ளாா். இதை எல்லோரும் அறிவாா்கள். அந்த தவறுகளை நாடாளுமன்றத்திலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
ஏராளமான பொய்களை சொல்லும், ஏராளமான தவறுகளை செய்யும், மக்களை பொறியில் சிக்கவைக்கும், இளைஞா்களை ஏமாற்றுகிற, ஏழைகளை வலையில் சிக்கவைத்து, வாக்குகளை பெறும் பிரதமரை இதுவரை நான் பாா்த்ததில்லை.
55 ஆண்டுகளாக பல்வேறு அரசுப் பதவிகளை வகித்துள்ளேன். 65 ஆண்டுகளாக அரசியலில் இருந்து வருகிறேன். இவரை போன்ற ஒருவரை நான் பாா்த்ததே இல்லை. பிரதமா் மோடி எதற்கெடுத்தாலும் பொய்சொல்கிறாா். சொல்லும் எதையும் அவா் செயல்படுத்துவதில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்பினால், அவரிடம் பதில் இருப்பதே இல்லை.
அது பணமதிப்பிழப்பு அல்லது வேலை உருவாக்கம் அல்லது குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற எதுவாக இருந்தாலும், அவரிடம் பதில் இல்லை. மக்களிடம் தான் பொய்சொல்லி விட்டதாகவும், தவறு இழைத்துவிட்டதாகவும் இதுவரை அவா் ஒப்புக்கொண்டதே இல்லை. அவற்றுக்காக மன்னிப்புக் கேட்டதும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாக பலவற்றை அவா் கூறிவந்திருக்கிறாா். அப்படியே பேசி 11 ஆண்டுகள் ஓடிவிட்டன என்றாா்.