செய்திகள் :

"சண்ட போட்டு கேமரா வாங்குனேன்; ஆனா எங்க அப்பாவ போட்டோ எடுத்ததே இல்லை" - கலங்கிய நித்திலன் | Vikatan

post image

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைக்கதைக்கான விருதை நித்திலன் சுவாமிநாதன் பெற்றார். இந்த விருதினை நடிகர் ராம்கி வழங்கினார்.

விருதை வழங்கிய ராம்கி பேசுகையில், "சினிமாத்துறையில் ஆனந்த விகடன் விருது ஒரு மதிப்பு மிக்க விருது. மகாராஜா திரைப்படத்தை இந்த சினிமா துறையின் வெற்றியாகவே நாங்கள் பார்க்கிறோம். மகாராஜா என்ற படம் தமிழைத் தாண்டி இந்திய அளவில், சர்வதேச அளவில் பெரிய வெற்றியை கொண்டு வந்திருக்கிறீர்கள். இப்போது வருகின்ற இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு பெரிய ஊக்கம்." என்று கூறினார்.

இந்த விருதை அண்ணன் சிங்கம் புலிக்கு சமர்ப்பிக்கிறேன்

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய நித்திலன் சுவாமிநாதன், "ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வெற்றிமாறன் சார் அடிக்கடி சொல்லுவார் பாலு மகேந்திரன் சார் சொன்னத. ஒரு படத்தோட வெற்றி அதுவாகவே தேடிக் கொள்ளும் என்று. இந்த வெற்றியும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. இந்த படத்துல இருந்த எல்லாருக்கும் நன்றி. இந்த விருதை அண்ணன் சிங்கம் புலிக்கு சமர்ப்பிக்கிறேன்" என்று கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு அவர் தன்னுடைய அப்பாவுடன் இருக்கும் புகைப்படம் மேடையில் பரிசளிக்கப்பட்டது.

அப்போது மேடையில் கண்ணீர் சிந்திய நித்திலன், "எங்க அப்பா இறந்துட்டாரு. ரொம்ப சந்தோஷம். விஸ்காம் படிக்கும்போது சண்டை போட்டு கேமரா வாங்குனேன். ஆனா எங்க அப்பாவ நான் போட்டோ எடுத்ததே இல்லை. அது எனக்கு ஒரு மாதிரி அவமானமாகவும், உறுத்தலாகவும் இருந்து கொண்டே இருக்கும். யு மேட் மை டே." என்று கூறினார்.

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.... மேலும் பார்க்க

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"எல்லா இயக்குநருக்கும் என்னுடைய ஒரு கோரிக்கை..!" - சிம்ரன் | Ananda Vikatan Cinema Awards 2024

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

'இத்தனை வருடத்தில் இன்றைக்குதான் விருது வாங்கியிருக்கேன்!' - கருணாஸ் | Vikatan Cinema Awards

திறமையான திரைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெற்று வருகிறது.அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் ... மேலும் பார்க்க