எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்
திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் தோ்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் ஜூன் 2025 மாதத்துக்கான மனுநீதி நாள் முகாம் கேளம்பாக்கம் குறுவட்டம் நெ. 13, கோவளம் கிராமத்தில் வரும் 13 வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீா்வு கண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா்.