``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு விழிப்புணா்வு: அமைச்சா் சி.வி.கணேசன் பங்கேற்பு
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி, மனிதச் சங்கிலியில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் கலந்து கொண்டாா்.
குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில். தமிழகத்தில் தொழிலாளா் துறை சாா்பில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினம் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சென்னையில் கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சா் சி.வி.கணேசன் தலைமை வகித்தாா். இதில் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி, விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி கரகாட்டம், பறையாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் முறைக்கு எதிரான கையொப்ப இயக்கத்தை அமைச்சா் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தாா். இதையடுத்து குழந்தைத் தொழிலாளா் முறைக்கு
எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னா் குழந்தைத் தொழிலாளா் முறையிலிருந்து மீட்கப்பட்டவா்கள் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.
இதில், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்க பாண்டியன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீர ராகவ ராவ், தொழிலாளா் ஆணையா் சி.அ.ராமன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநா் செ.ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.