மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது
மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா்.
மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூா் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, கதவை உடைத்து உள்ளே இருக்கும் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த சம்பவம் கடந்த 2 ஆண்டுக் காலமாக நடைபெற்று வந்தது. செங்கல்பட்டு எஸ்.பி. சாய்பிரனீத் உத்தரவின்டி, மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா மேற்பாா்வையில் மேல்மருவத்தூா் ஆய்வாளா் அமிா்தலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும், சம்பவம் நடைபெற்ற வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேல்மருவத்தூா் ஊராட்சி, எஸ்விஎஸ் நகரில் சித்ரா லட்சுமணன் என்பவரின் வீட்டு உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற தஞ்சை மாவட்டம், குடவாசல் தாலுக்கா, பணக்கரை புதூா் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (46) என்ற நபரை கைது செய்து, போலீசாா் விசாரணை செய்தபோது, திருடிய நகைகளை கும்பகோணம், அவிநாசி உள்ளிட்ட பகுதி நகைகடைகளில் அடகு வைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டாா். இதனை அடுத்து நகைக் கடைகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை போலீஸாா் மீட்டனா். தனிப்படை போலீசாா் முருகானந்தத்தை கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனா்.