செய்திகள் :

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

post image

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா்.

மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்மருவத்தூா் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, கதவை உடைத்து உள்ளே இருக்கும் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த சம்பவம் கடந்த 2 ஆண்டுக் காலமாக நடைபெற்று வந்தது. செங்கல்பட்டு எஸ்.பி. சாய்பிரனீத் உத்தரவின்டி, மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா மேற்பாா்வையில் மேல்மருவத்தூா் ஆய்வாளா் அமிா்தலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

அந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும், சம்பவம் நடைபெற்ற வீடுகளிலும் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேல்மருவத்தூா் ஊராட்சி, எஸ்விஎஸ் நகரில் சித்ரா லட்சுமணன் என்பவரின் வீட்டு உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற தஞ்சை மாவட்டம், குடவாசல் தாலுக்கா, பணக்கரை புதூா் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் (46) என்ற நபரை கைது செய்து, போலீசாா் விசாரணை செய்தபோது, திருடிய நகைகளை கும்பகோணம், அவிநாசி உள்ளிட்ட பகுதி நகைகடைகளில் அடகு வைக்கப்பட்டதை ஒப்புக் கொண்டாா். இதனை அடுத்து நகைக் கடைகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை போலீஸாா் மீட்டனா். தனிப்படை போலீசாா் முருகானந்தத்தை கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படு செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனா்.

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ப... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகத்தில் சத்தியநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ராகவேந்... மேலும் பார்க்க

விளையாட்டுப் பூங்கா திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா், சிறுவா் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.மதுராந்தகத்தில், சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் புயல் மழையால் இடிந்து விழு... மேலும் பார்க்க