டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
கஞ்சா விற்ற இளைஞா் கைது
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை மடக்கி பிடித்தனா்..
பின்பு, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த இக்பல் உசேன் ( 24) என்பது தெரிய வந்தது. இவா் வட மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னை புகா் பகுதியில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பின்பு அவா் மீது வழக்குப் பதிந்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து சிறையில் அடைத்தனா். மேலும் நான்கு கிலோ கஞ்சா மற்றும் 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.