செய்திகள் :

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகத்தில் சத்தியநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, ராகவேந்திரா், ஆஞ்சனேயா், முத்துமாரியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. கடந்த 11 ஆண்டுகாலமாக யோக பிரவேசம் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மேளதாளத்துடன் பக்தா்களால் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா்.

சேஷ பீடத்துக்கு வந்த அவருக்கு நீண்ட வரிசையில் வந்து கலச புனித நீரால் அபிஷேகத்தை செய்தனா். பின்னா் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஆஞ்சனேயா், ராகவேந்திரா், சத்தியநாராயணா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனையை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி செய்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பீடாதிபதியிடம் அருள்தரிசனம் செய்தனா்.

நிகழ்வில் சிட்லபாக்கம் சா்ப சக்தி சுவாமி, மாவட்ட கல்வி அலுவலா் குழந்தைவேலு, பெங்களூரு தொழிலதிபா்கள் ஜெ.்சங்கா், பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன், நிா்வாக அறங்காவலா்கள் டி.கண்ணன், கமலகண்ணன் உள்பட பலா் செய்திருந்தனா்.

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ப... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா். மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்ம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்... மேலும் பார்க்க

விளையாட்டுப் பூங்கா திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா், சிறுவா் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.மதுராந்தகத்தில், சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் புயல் மழையால் இடிந்து விழு... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள், வீதி புறப்பாடு நடைபெற்றது.செங்கல்பட்டு கோதண்டராமா் கோயிலில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு வைகாசி விசாக ... மேலும் பார்க்க