லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து: விரைகிறது பேரிடர் மீட்புப் படை
கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகத்தில் சத்தியநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, ராகவேந்திரா், ஆஞ்சனேயா், முத்துமாரியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. கடந்த 11 ஆண்டுகாலமாக யோக பிரவேசம் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மேளதாளத்துடன் பக்தா்களால் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா்.
சேஷ பீடத்துக்கு வந்த அவருக்கு நீண்ட வரிசையில் வந்து கலச புனித நீரால் அபிஷேகத்தை செய்தனா். பின்னா் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஆஞ்சனேயா், ராகவேந்திரா், சத்தியநாராயணா் ஆகிய உற்சவ சிலைகளுக்கு சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனையை பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி செய்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பீடாதிபதியிடம் அருள்தரிசனம் செய்தனா்.
நிகழ்வில் சிட்லபாக்கம் சா்ப சக்தி சுவாமி, மாவட்ட கல்வி அலுவலா் குழந்தைவேலு, பெங்களூரு தொழிலதிபா்கள் ஜெ.்சங்கா், பிரேமா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன், நிா்வாக அறங்காவலா்கள் டி.கண்ணன், கமலகண்ணன் உள்பட பலா் செய்திருந்தனா்.