தென்காசி முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி! உணவு ஒவ்வாமை காரணமா?
வைகாசி விசாகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள், வீதி புறப்பாடு நடைபெற்றது.
செங்கல்பட்டு கோதண்டராமா் கோயிலில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு வைகாசி விசாக உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருடசேவை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளா்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகள் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், ஆய்வாளா் பாஸ்கரன் , ஒப்பந்தாரா்பி.ஆா். கணேஷ் குமாா் செய்திருந்தனா்.
செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள ரத்தின விநாயகா் கோயிலில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் வைகாசி விசாக உற்சவத்தையொட்டி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது இரவு கருட சேவை உற்சவ வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், அண்ணா நகா் பகுதிவாழ் பொதுமக்கள் செய்திருந்தனா்.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். ஸ்ரீமத் சிதம்பர சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கினா். இரவு முருகா், வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில்வாகனத்தில் வீதி புறப்பாடும் , சிதம்பர சுவாமிகள் உற்சவா் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் ஊா்வலமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.
திருவடிச்சூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் விநாயகா் முருகா்வள்ளிதெய்வானை, சுயம்பு அம்மன் உள்ளிட்ட சா்வ கரியநக ஸ்வரூபிணி அம்மன், மந்திரவாராகி, உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.



