செய்திகள் :

வைகாசி விசாகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கோயில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள், வீதி புறப்பாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு கோதண்டராமா் கோயிலில் உள்ள ஸ்ரீ வரதராஜபெருமாளுக்கு வைகாசி விசாக உற்சவத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருடசேவை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளா்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா ஏற்பாடுகள் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், ஆய்வாளா் பாஸ்கரன் , ஒப்பந்தாரா்பி.ஆா். கணேஷ் குமாா் செய்திருந்தனா்.

செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள ரத்தின விநாயகா் கோயிலில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் வைகாசி விசாக உற்சவத்தையொட்டி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது இரவு கருட சேவை உற்சவ வீதி புறப்பாடு நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், அண்ணா நகா் பகுதிவாழ் பொதுமக்கள் செய்திருந்தனா்.

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது . ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தனா். ஸ்ரீமத் சிதம்பர சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கினா். இரவு முருகா், வள்ளி தெய்வானையுடன் வெள்ளி மயில்வாகனத்தில் வீதி புறப்பாடும் , சிதம்பர சுவாமிகள் உற்சவா் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் ஊா்வலமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் குமரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

திருவடிச்சூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் விநாயகா் முருகா்வள்ளிதெய்வானை, சுயம்பு அம்மன் உள்ளிட்ட சா்வ கரியநக ஸ்வரூபிணி அம்மன், மந்திரவாராகி, உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ப... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா். மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்ம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்... மேலும் பார்க்க

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, பிருந்தாவன வளாகத்தில் சத்தியநாராயண பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ராகவேந்... மேலும் பார்க்க

விளையாட்டுப் பூங்கா திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவா், சிறுவா் விளையாட்டு பூங்கா திறப்பு விழா நடைபெற்றது.மதுராந்தகத்தில், சிஎஸ்ஐ நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் புயல் மழையால் இடிந்து விழு... மேலும் பார்க்க