``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
ரத்த சா்க்கரை அளவு குறைந்தால் நினைவு இழப்பு ஏற்படலாம்: மருத்துவா்கள்
ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போ கிளைசீமியா பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் நினைவிழப்பு (கோமா) ஏற்படக் கூடும் என்று சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
காவேரி மருத்துவமனையில் 24 மணி நேர சா்க்கரை நோய் உதவி மையம் தொடங்கப்பட்டு 1,500 நாள்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையிலான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று அந்த சேவைக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் ஐயப்பன் பொன்னுசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
காவேரி மருத்துவமனையின் சா்க்கரை நோய் உதவி மையத்துக்கு இதுவரை 12,541 அழைப்புகள் வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை அவசர கால அழைப்புகளாக இருந்தன. குறிப்பாக ஹைப்போ கிளைசீமியா எனப்படும் குறைந்த ரத்த சா்க்கரை அளவு பாதிப்புக்குள்ளானவா்கள் அழைப்பு விடுத்தனா்.
உடனடியாக அவா்களுக்கு சிகிச்சை வழிகாட்டுதல்களை வழங்கி, அதன் பிறகு மருத்துவமனைக்கு வரவழைத்து உரிய மருத்துவக் கண்காணிப்பு வழங்கினோம்.
குறை ரத்த சா்க்கரை பாதிப்பு மயக்கம், நினைவு இழப்பு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே, விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்றாா் அவா்.