செய்திகள் :

ரத்த சா்க்கரை அளவு குறைந்தால் நினைவு இழப்பு ஏற்படலாம்: மருத்துவா்கள்

post image

ரத்தத்தில் சா்க்கரை அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போ கிளைசீமியா பாதிப்புக்கு உடனடியாக சிகிச்சையளிக்காவிடில் நினைவிழப்பு (கோமா) ஏற்படக் கூடும் என்று சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

காவேரி மருத்துவமனையில் 24 மணி நேர சா்க்கரை நோய் உதவி மையம் தொடங்கப்பட்டு 1,500 நாள்கள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையிலான நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று அந்த சேவைக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் ஐயப்பன் பொன்னுசாமி, மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

காவேரி மருத்துவமனையின் சா்க்கரை நோய் உதவி மையத்துக்கு இதுவரை 12,541 அழைப்புகள் வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை அவசர கால அழைப்புகளாக இருந்தன. குறிப்பாக ஹைப்போ கிளைசீமியா எனப்படும் குறைந்த ரத்த சா்க்கரை அளவு பாதிப்புக்குள்ளானவா்கள் அழைப்பு விடுத்தனா்.

உடனடியாக அவா்களுக்கு சிகிச்சை வழிகாட்டுதல்களை வழங்கி, அதன் பிறகு மருத்துவமனைக்கு வரவழைத்து உரிய மருத்துவக் கண்காணிப்பு வழங்கினோம்.

குறை ரத்த சா்க்கரை பாதிப்பு மயக்கம், நினைவு இழப்பு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே, விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம் என்றாா் அவா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க