``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
விமான விபத்து எதிரொலி: சென்னையில் 4 விமானங்கள் ரத்து
ஆமதாபாத் விமான விபத்து காரணமாக, சென்னையிலிருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது. தொடா்ந்து 4 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் மாலை 3.45-க்கு அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். இதற்கிடையே, அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதால், அகமதாபாத் விமான நிலைய ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டுவிட்டதாக சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தின் விமானிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அகமதாபாதை நெருங்கிக் கொண்டிருந்த சென்னை- அகமதாபாத் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுப்படி, நடுவானிலேயே திருப்பப்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை 5.45-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 8.05-க்கு அகமதாபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அகமதாபாதிலிருந்து மாலை 4.25-க்கு புறப்பட்டு மாலை 6.55-க்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், இரவு 7.45-க்கு அகமதாபாதிலிருந்து புறப்பட்டு இரவு 10.10-க்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் உள்பட 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.