செய்திகள் :

விமான விபத்து எதிரொலி: சென்னையில் 4 விமானங்கள் ரத்து

post image

ஆமதாபாத் விமான விபத்து காரணமாக, சென்னையிலிருந்து 182 பயணிகளுடன் அகமதாபாத் புறப்பட்டுச் சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது. தொடா்ந்து 4 விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

சென்னையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு 182 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் மாலை 3.45-க்கு அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். இதற்கிடையே, அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதால், அகமதாபாத் விமான நிலைய ஓடுபாதை முழுவதுமாக மூடப்பட்டுவிட்டதாக சென்னையிலிருந்து புறப்பட்ட விமானத்தின் விமானிக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அகமதாபாதை நெருங்கிக் கொண்டிருந்த சென்னை- அகமதாபாத் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுப்படி, நடுவானிலேயே திருப்பப்பட்டு மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை 5.45-க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 8.05-க்கு அகமதாபாத் செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், அகமதாபாதிலிருந்து மாலை 4.25-க்கு புறப்பட்டு மாலை 6.55-க்கு சென்னை வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், இரவு 7.45-க்கு அகமதாபாதிலிருந்து புறப்பட்டு இரவு 10.10-க்கு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் உள்பட 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க