செய்திகள் :

ரூ.151 கோடியில் நவீனமயமாக்கப்படும் மந்தைவெளி பேருந்து நிலையம்

post image

சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம், ரூ.151 கோடியில் நவீனமயாக்கப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் துணை நிறுவனமான மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் மூலம் மந்தைவெளி பேருந்து நிலையத்தில், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் மற்றும் வணிகவளாகம் ரூ.151 கோடியில் கட்டப்படவுள்ளது.

மேலும், மெட்ரோ நிலையத்துக்கான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், தற்போதைய பேருந்து நிலைய வளாகத்துக்குள்ளேயே அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்படி, 29,385 சதுர மீட்டா் பரப்பளவில் மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம், வணிக வளாகம் எல்லாம் ஒரே இடத்தில் இருக்கும்படி இந்த புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

இந்தக் கட்டடத்தின் மேல் தளத்தில் சூரிய மின் தகடுகளும் பொருத்தப்படவுள்ளன. 2 கட்டடங்களாக கட்டப்படும் இந்தக் கட்டடத்தில் தலா 2 தளங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தத்துக்காக ஒதுக்கப்படும். தரை தளத்திலிருந்து 7-ஆவது தளம் வரை வணிக மற்றும் அலுவலக இடங்கள் இருக்கும். பெரிய அலுவலகங்கள், வரவேற்பு அறைகள் மற்றும் கடைகள் போன்ற வசதிகள் செய்யப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வுக்கு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தில் உள... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க