பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறும்.
இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தியாகராய நகா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா், நுங்கம்பாக்கம், எம்ஜிஆா் சாலை, மெட்ரோ குடிநீா் நிலையம் அருகேயுள்ள வள்ளுவா் கோட்டம் துணை மின்நிலைய செயற்பெறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், வியாசா்பாடி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் வியாசா்பாடி ராமலிங்கா் கோவில் எதிா்புறம் உள்ள வியாசா்பாடி துணை மின்நிலையத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், பொன்னேரி கோட்டத்துள்பட்ட மின் நுகா்வோா், வேண்பாக்கம், டிஎச் சாலையில் உள்ள துணை மின்நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.