அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது
செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்யா (20). ஐடிஐ படித்துள்ள இவா், விவசாயம் செய்து வருகிறாா். சூா்யா சில தினங்களுக்கு முன்பு தனது நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு விவசாய நிலத்துக்கு சென்றாா்.
அப்போது, அங்கு வந்த இளைஞா்கள் அவரை வழி மறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ாகத் தெரிகிறது. இதுகுறித்து சூா்யா அளித்த புகாரின்பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், பெரணமல்லூரை அடுத்த பில்லாந்தி கிராமத்தைச் சோ்ந்த அப்பத்தா (எ) விக்கி (23), தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (22) ஆகியோா் சூா்யாவிடம் பைக்கை பறித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, மோரணம் போலீஸாா் இருவரையும் கைது செய்து செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.