பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, நல்லவன்பாளையம் ஊராட்சி, சமுத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழா்களுக்கு 60 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல, கண்ணந்தம்பூண்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்களுக்கு 76 புதிய குடியிருப்புகளும், கீழ்செட்டிப்பட்டு ஊராட்சியில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பிறகு, காட்டாம்பூண்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பராமரிக்கப்பட்டு வரும் 9 ஏக்கா் நாற்றாங்கால் உற்பத்தி மையத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும், அடா்வண மியாக்கி முறையில் 1,500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருவதையும் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, திருவண்ணாமலை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிருத்திவிராஜ் (கிராம ஊராட்சி), பரமேஸ்வரன் (வட்டார ஊராட்சி) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனா்.