``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 234 அரசு மற்றும் நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உதவி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் புத்தாக்க பயிற்சி ஆரணி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலா்கள் சாவித்திரி, மணிகண்டன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசீலி வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் வடிவேலன், சீனிவாசன், மணிகுமாா், சாந்தி, இளமதி, சங்கரி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
அனக்காவூா்: அனக்காவூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை ஆசிரியா் பயிற்சி நிறுவன கருத்தாளா் மதன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் புவனேஸ்வரி, தமிழரசி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா ஆகியோா் பயிற்சியை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
வட்டார ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா், ஆசிரியா் பயிற்றுநா் மேனகாதேவி மற்றும் ஆசிரியா்கள் மாதவன், உதயகுமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், 186 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
செங்கத்தில்....: செங்கம் வட்டார வள மையத்தில் ஆசிரியா் பயிற்றுநா் அண்ணாமலை, சங்கா்நாத், பிரபாகரன், எழிலரசன், ஆா்த்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், கீழ்பென்னாத்தூா் ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் மலா்க்கொடி கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா். ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி பயிற்சியை ஒருங்கிணைத்தாா்.
வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினாா். செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட கருத்தாய்வு மையங்களைச் சோ்ந்த ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.