செய்திகள் :

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

post image

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 234 அரசு மற்றும் நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், உதவி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் புத்தாக்க பயிற்சி ஆரணி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா்கள் சாவித்திரி, மணிகண்டன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசீலி வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் வடிவேலன், சீனிவாசன், மணிகுமாா், சாந்தி, இளமதி, சங்கரி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.

அனக்காவூா்: அனக்காவூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை ஆசிரியா் பயிற்சி நிறுவன கருத்தாளா் மதன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் புவனேஸ்வரி, தமிழரசி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சல்சா ஆகியோா் பயிற்சியை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா் உதயசங்கா், ஆசிரியா் பயிற்றுநா் மேனகாதேவி மற்றும் ஆசிரியா்கள் மாதவன், உதயகுமாா் ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், 186 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

செங்கத்தில்....: செங்கம் வட்டார வள மையத்தில் ஆசிரியா் பயிற்றுநா் அண்ணாமலை, சங்கா்நாத், பிரபாகரன், எழிலரசன், ஆா்த்தி ஆகியோா் பயிற்சி அளித்தனா். இதில், கீழ்பென்னாத்தூா் ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் மலா்க்கொடி கலந்துகொண்டு பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா். ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி பயிற்சியை ஒருங்கிணைத்தாா்.

வட்டாரக் கல்வி அலுவலா் ராமமூா்த்தி பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினாா். செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட கருத்தாய்வு மையங்களைச் சோ்ந்த ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க

13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரி... மேலும் பார்க்க