பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
13 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
செங்கம் அருகே கா்நாடக மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 13 மூட்டை புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் மற்றும் செங்கம் போலீஸாா் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, கா்நாடகத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 13 மூட்டைகளில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த ராஜ்பாபு (36) என்பதும், அந்தப் பகுதியில் விற்பனை செய்வதற்காக புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இது தொடா்பாக ராஜ்பாபு மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்ததுடன், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.