செய்திகள் :

அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டினாா்

post image

சென்னை  அண்ணா நகரில் ரூ.9.17 கோடியில் புதிய மகப்பேறு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் 96-ஆவது வாா்டுக்குள்பட்ட யுனைடெட் இந்தியா நகா், முதல் பிரதான சாலையில் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இந்தப் பழைய மருத்துவமனையை இடித்து அதே இடத்தில், ரூ.9.17 கோடியில் புதிதாக மகப்பேறு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 1,275 ச.மீ. பரப்பளவில் கட்டப்படும் இந்த மருத்துவமனையில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மொத்தம் 3 தளங்கள் அமைக்கப்படவுள்ளன.

மேலும், 2 அறுவை சிகிச்சை அறைகள், 41 படுக்கை வசதிக் கொண்ட அறைகள், அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஸ்கேன், ரத்த சேகரிப்பு அறை, எக்ஸ்ரே வசதிகள், 2 மின் தூக்கிகள், 2 படிக்கட்டுக்கள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் மேயா் ஆா்.பிரியா, வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெற்றி அழகன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க