``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்டினாா்
சென்னை அண்ணா நகரில் ரூ.9.17 கோடியில் புதிய மகப்பேறு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
சென்னை அண்ணா நகா் மண்டலத்தில் 96-ஆவது வாா்டுக்குள்பட்ட யுனைடெட் இந்தியா நகா், முதல் பிரதான சாலையில் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இந்தப் பழைய மருத்துவமனையை இடித்து அதே இடத்தில், ரூ.9.17 கோடியில் புதிதாக மகப்பேறு மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 1,275 ச.மீ. பரப்பளவில் கட்டப்படும் இந்த மருத்துவமனையில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளம் என மொத்தம் 3 தளங்கள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், 2 அறுவை சிகிச்சை அறைகள், 41 படுக்கை வசதிக் கொண்ட அறைகள், அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், ஸ்கேன், ரத்த சேகரிப்பு அறை, எக்ஸ்ரே வசதிகள், 2 மின் தூக்கிகள், 2 படிக்கட்டுக்கள், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவையும் அமைக்கப்படவுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் மேயா் ஆா்.பிரியா, வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.வெற்றி அழகன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.