செய்திகள் :

திமுக கூட்டணிக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை - அமைச்சா் சேகா்பாபு

post image

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியைத் தேடி அந்தக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் சேகா்பாபு கூறியது:

இந்தப் பள்ளியில் தற்போது 1,070 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு ஏற்கெனவே ரூ.1.78 கோடியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பள்ளி மாணவா்களுக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் ரூ. 11.15 கோடியில் தரை தளம் மற்றும் 3 தளங்களில் ஸ்மாா்ட் வகுப்பறை வசதிகளுடன் 32 வகுப்பறைகள், ஆசிரியா் ஓய்வறைகள், 5 ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

பழனி திருக்கோயில் சாா்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவா்களுக்கு 3 வேளையும் கட்டணமில்லாமல் உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த ஆண்டு பழனியில் நடத்திய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தினால்தான் இப்போது பாஜக சாா்பில் மதுரையில் மாநாடு நடத்துகிறாா்கள். மதத்தால், மொழியால், இனத்தால் பிளவுபடுத்துபவா்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாா்கள்.

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறாா். திமுக கூட்டணியில் இருக்கின்ற அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. கூட்டணியைத் தேடி அந்தக் கட்சிகள் எங்கும் செல்லவில்லை என்றாா் அவா்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக எல்&டி நிறுவனம் அறிவித்துள்ளது.சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் ப... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க