Ahmedabad Plane Crash: கடைசியாக வந்த MAYDAY கால்; விமானப் போக்குவரத்து அமைச்சர் சொல்வது என்ன?
குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
AI 171 - 787 என்ற எண் கொண்ட ஏர் இந்தியாவின் போயிங்-787 விமானம் மதியம் 1:17 மணியளவில் புறப்பட்டிருக்கிறது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ATC) கூறுவதன்படி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் MAYDAY Call அனுப்பியிருக்கிறது. இது விமான பயணத்தின்போது உயிருக்கு ஆபத்தான சூழலில் அவசர உதவியை நாடி அனுப்பப்படும் சிக்னலாகும்.
அதன்பிறகு ATC தரப்பில் அனுப்பப்பட்ட சிக்னல்களுக்கு எந்த பதிலும் இல்லை. விமான ஓடுதளம் 23ல் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்துள்ளது. விபத்து நடந்த பகுதியிலிருந்து வானுயர கரும்புகை எழுந்துள்ளது.
விமானத்துக்குள் 242 பயணிகள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அதில் 53 பிரிட்டீஷார் அடக்கம். இதுவரையில் 30 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விமான விபத்து குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, "அகமதாபாத் விமான விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாங்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்கிறோம். நான் தனிப்பட்ட முறையில் நிலைமையைக் கண்காணித்து வருகிறேன்.
மேலும் அனைத்து விமானப் போக்குவரத்து மற்றும் அவசரக்கால மீட்பு நிறுவனங்களும் விரைவாக ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவிகள் விரைந்து செல்வதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
விமானத்திலிருந்த அனைவருக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானப் போக்குவரத்து அமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
અમદાવાદમાં વિમાન દુર્ઘટના વિશે જાણીને ખૂબ જ આઘાત અને દુઃખ થયું.
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) June 12, 2025
અમે હાઈ એલર્ટ પર છીએ. હું વ્યક્તિગત રીતે પરિસ્થિતિ પર નજર રાખી રહ્યો છું.
તમામ ઉડ્ડયન અને કટોકટી પ્રતિભાવ એજન્સીઓને ઝડપી અને સંકલિત કાર્યવાહી કરવા નિર્દેશ આપી દેવામાં આવ્યા છે. તબીબી સહાય અને રાહત સહાય સ્થળ પર…