செய்திகள் :

Ahmedabad plane crash: "அமித்ஷாவோடு ஆலோசனை; போர்க்கால நடவடிக்கை" - குஜராத் முதல்வர்

post image

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளைச் செய்ய உத்தரவிட்டிருப்பதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்திருக்கிறார்.

Ahmedabad Airplane Accident
Ahmedabad Airplane Accident

அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானத்தில் விமான குழுவினரோடு சேர்த்து மொத்தமாக 242 பேர் பயணித்திருக்கிறார்கள்.

தங்களின் விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனமும் தங்களின் X பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா குஜராத்தின் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சருடன் இந்த விபத்து பற்றி ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது.

அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

லண்டனின் காட்விக்கை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானத்தில் பாஜக-வைச் சேர்ந்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக Economic Time, Gujart TV 9 போன்ற நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூபேந்திர படேல்
பூபேந்திர படேல்

இந்நிலையில் குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் பதிவில், "அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான செய்தியால் மனம் வருந்தியுள்ளேன்.

விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

காயமடைந்த பயணிகளைச் சிகிச்சைக்காக அனுப்புவதற்குப் பசுமைப் பாதை (Green Corridor) ஏற்பாடு செய்யவும், மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னுரிமையாக உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களும் என்னுடன் தொடர்பு கொண்டு, இந்த விமான விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு NDRF குழுக்கள் மற்றும் மத்திய அரசின் முழு உதவியையும் உறுதி அளித்துள்ளார்" எனக் கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க