செய்திகள் :

விமான விபத்து: குஜராத் விரைகிறார் அமித் ஷா!

post image

குஜராத்தில் விமான விபத்து ஏற்பட்டுள்ளதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆமதாபாத் விரைந்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளதால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 50 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆமதாபாத் விரைந்துள்ளார். ஏற்கெனவே குஜராத் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் அவர் தொலைபேசியில் பேசிய நிலையில் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாகச் செல்கிறார்.

இதையும் படிக்க | குஜராத்தில் பயணிகள் விமானம் விழுந்தது! 240 பேரின் கதி என்ன?

தேனிலவு கொலை: மற்றொரு பெண்ணைக் கொன்று நாடகமாக திட்டமிட்டிருந்த சோனம்!

தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான சோனம், மற்றொரு பெண்ணையும் கொன்று, அந்த உடலை சோனம் என்று நாடகமாட திட்டமிட்டிருந்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் பார்க்க

மனைவி அஸ்தியைக் கரைக்க வந்தவர் விமான விபத்தில் பலி! லண்டனில் தவிக்கும் மகள்கள்!

மனைவியின் அஸ்தியை நர்மதை ஆற்றில் கரைக்க லண்டனில் இருந்து வந்த அர்ஜுன் பட்டோலியா, இறுதிச் சடங்குகளை செய்து முடித்துவிட்டு லண்டன் திரும்பும்போது விமான விபத்தில் பலியாகியுள்ளார்.மனைவியின் இறுதி ஆசையை நிற... மேலும் பார்க்க

நான்காவது முயற்சியில்தான் கொலை! சோனம் வெளியிட்ட திடுக்கிடும் வாக்குமூலம்...

மூன்று முறை கொலை முயற்சியில் தப்பிய ராஜா ரகுவன்ஷியை நான்காவது முறையில் கொன்றதாக அவரது மனைவி சோனம் வாக்குமூலம் அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர் தி... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிர் தப்பியது ஒருவர் அல்ல இருவர்!

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்தது ஒருவர் அல்ல இருவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பூமி சௌகான் பற்றிய தகவல்களை அறியும்போது.அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரு சில வினாடிகளில் ப... மேலும் பார்க்க

கருப்புப் பெட்டி மீட்பு! செய்திகள் நேரலை...

மருத்துவ தம்பதி பலிஅகமதாபாத் விமான விபத்தில் உதய்ப்பூரைச் சேர்ந்த மருத்துவ தம்பதி மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் பலியாகினர். லண்டனில் குடியேறும் கனவோடு இந்தியாவில் இருந்து புறப்பட்ட 5 பேரும் விமான... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! பலியான கேரள செவிலியரை விமர்சித்த வட்டாட்சியர் பணியிடை நீக்கம்!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான செவிலியரை விமர்சித்த கேரள தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா கோபகுமாரன் (42) பலியானது... மேலும் பார்க்க