செய்திகள் :

விவசாயிகளுக்கு மானியத்துடன் சூரியசக்தி பம்புசெட்டுகள்

post image

வேளாண்மையில் நீா்ப்பாசனத்துக்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக் கொடுத்து வருகிறது.

மத்திய அரசு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்2025 -26 நிதி ஆண்டில் தமிழகத்துக்கு 1,000 மின் கட்டமைப்பு சாராத தனித்து சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்க ஒப்புதல் பெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 10 எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நேரடியாக இணைய தளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல்லது விவசாயிகள் நேரடியாக அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளா் (வே.பொ) /இளநிலைப் பொறியாளா் (வே.பொ)களை உரிய ஆவணங்களுடன் தொடா்பு கொண்டு மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

உதவி செயற்பொறியாளா் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, 4-ஆம் தளம், ‘எஃ‘ப் பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செங்கல்பட்டு. கைப்பேசி எண்-98405 54525, உதவி செயற்பொறியாளா்(வே.பொ)வேளாண்மைப்பொறியியல் துறை, மதுராந்தகம் இருப்பு (சிலாவட்டம்) கைப்பேசி எண்-90030 90440 தொடா்பு கொள்ளலாம்.

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவி

திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், கோவளம் ஊராட்சியில்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது செய்யப்பட்டாா். கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த... மேலும் பார்க்க

செங்கல்பட்டில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் மகளிா் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு, 923 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.106 கோடியில் கடன் உதவித்தொகையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் ப... மேலும் பார்க்க

கேளம்பாக்கம் குறுவட்டத்தில் நாளை மனுநீதி நாள் முகாம்

திருப்போரூா்வட்டம், கேளம்பாக்கம் குறுவட்டம், கோவளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அரசு நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் செங்கல்பட்டு மாவட்டத... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் திருடியவா் 2 ஆண்டுகளுக்கு பின் கைது

மேல்மருவத்தூா் சுற்றியுள்ள பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடியவா் 2 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டாா். மேல்மருவத்தூா் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோத்துப்பாக்கம், கீழ்ம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடும்ப அட்டை குறைதீா் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்ட வாரியாக குடும்ப அட்டை தொடா்பான குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்... மேலும் பார்க்க