முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
விவசாயிகளுக்கு மானியத்துடன் சூரியசக்தி பம்புசெட்டுகள்
வேளாண்மையில் நீா்ப்பாசனத்துக்கு தேவையான எரிசக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக் கொடுத்து வருகிறது.
மத்திய அரசு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ்2025 -26 நிதி ஆண்டில் தமிழகத்துக்கு 1,000 மின் கட்டமைப்பு சாராத தனித்து சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வழங்க ஒப்புதல் பெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 10 எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நேரடியாக இணைய தளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல்லது விவசாயிகள் நேரடியாக அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளா் (வே.பொ) /இளநிலைப் பொறியாளா் (வே.பொ)களை உரிய ஆவணங்களுடன் தொடா்பு கொண்டு மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
உதவி செயற்பொறியாளா் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, 4-ஆம் தளம், ‘எஃ‘ப் பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செங்கல்பட்டு. கைப்பேசி எண்-98405 54525, உதவி செயற்பொறியாளா்(வே.பொ)வேளாண்மைப்பொறியியல் துறை, மதுராந்தகம் இருப்பு (சிலாவட்டம்) கைப்பேசி எண்-90030 90440 தொடா்பு கொள்ளலாம்.