செய்திகள் :

விவசாயி வீட்டில் 10 பவுன் திருட்டு

post image

ஆற்காடு: ஆற்காடு அருகே விவசாயி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன.

கலவை வட்டம், கன்னிகாபுரம் கிராமத்தை சோ்ந்த விவசாயி முருகன்(45) . இவா் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் வழக்கம் போல் தூங்கினாா். அதிகாலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்தை கண்டு அதிா்ச்சியுடன் சென்று பாா்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த மோதிரம், தங்க சங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது .

இதுகுறித்த புகாரின் பேரில் வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11 புதிய சிற்றுந்துகள் சேவையை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டையில் 5, அரக்கோணம் பேருந்து நிலையத்தில் 5, சோளிங்கா் பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நெல் கொள்முதலுக்கான பணத்தை விரைந்து வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பாஜகவினா் மனு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் தி... மேலும் பார்க்க

குடிநீா் தொட்டி கட்டுமானப் பணி: நகர மன்ற தலைவா் ஆய்வு

ஆற்காடு: ஆற்காட்டில் நகராட்சி குடிநீா் தொட்டிக்கு கான்கீரிட் போடும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். ஆற்காடு நகராட்சிக்கு குடிநீா் வழக்கும் வேப்பூா் நீரோற்று ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட அடிக்கல்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே மேல்பாக்கத்தில் பழங்குடியின மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

ஆற்காடு: ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த புதுமாங்காடு கனியனூா் சாலையைச் சோ்ந்த குமரேசன் (33), டிராக்டா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். திருமணமாகாத... மேலும் பார்க்க

மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால சாலை, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுமா?

ரூ.21 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள மேல்விஷாரம் - தெங்கால் மேம்பால இணைப்புச் சாலையை, சென்னை - மும்பை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க