மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!
நெல் கொள்முதலுக்கான பணத்தை விரைந்து வழங்க வேண்டும்: ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் பாஜகவினா் மனு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு தரப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
அப்போது பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளா்ச்சித் துறை, நகராட்சி நிா்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு, மின்சாரத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் என 362 மனுக்கள் வரப்பெற்றன.
இதில், ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவா் நெமிலி பி.ஆனந்தன் தலைமையில், விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகையை அவா்களின் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படாமல் காலதாமதம் ஆகியுள்ளதால், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தை தொடரமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, மேற்கண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரா்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
இதில், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொறுப்பு), சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடையநம்பி, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, உதவி ஆணையா் கலால் ராஜ்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.