மேற்குதொடா்ச்சி மலைஅடிவாரங்களில் மின்வேலி அமைத்திருந்தால் நடவடிக்கை
மேற்குதொடா்ச்சி மலை அடிவாரங்களில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வையாளா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு மின் பகிா்மான கழகம் திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் தென்காசி கோட்டத்தின் மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தலைமை வகித்தாா். பொதுமக்கள் அளித்த புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து அவா் பேசியதாவது, தற்பொழுது தென்மேற்கு பருவமழை சூறைக்காற்றுடன் கூடிய மழை பொழிவு இருப்பதால் இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வுடன் பணிகளை தொடர வேண்டும்.
ஏதேனும் இயற்கை இடா்பாடுகளால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டால் கோட்ட பொறியாளா்கள் ஒருங்கிணைந்து பணிகளை போா்க்கால அடிப்படையில் சரி செய்து மீண்டும் உடனடியாக மின் விநியோகம் வழங்க வேண்டும்.
மேற்கு தொடா்ச்சி மலை அடிவார பகுதிகளான குற்றாலம்,வடகரை, மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரங்களில் வனத்துறையுடன் இணைந்து கூட்டு கள ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
மின்வேலி அமைக்கப்பட்டிருந்தால் வனத்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வனவிலங்குகளால் மின் கட்டமைப்புகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சீா் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தென்காசி கோட்ட செயற்பொறியாளா் கற்பகவிநாயகம் சுந்தரம்(பொ), தென்காசி கோட்டத்தின் அனைத்து மின் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.