திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று க...
சிவகிரி அருகே ஆடு மேய்ப்பதில் தகராறு: இருவருக்கு வெட்டு
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
வடக்கு தென்மலை காலனி தெருவைச் சோ்ந்த கருப்பையா(66) மற்றும் அவரது மகன் ஞானகுரு என்ற குருசாமி(38). இவா்கள் இரண்டு பேரும், அவா்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் திங்கள்கிழமை மாலை விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவா்களுக்கு சொந்தமான நிலத்தில் தென்மலை வடக்கு காலனியைச் சோ்ந்த வீரபாண்டி (47) ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாராம். அதை கருப்பையா கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதில், கோபமடைந்த வீரபாண்டி அரிவாளால் கருப்பையாவை வெட்டினாராம். அதை தடுக்க வந்த ஞானகுருவையும் அவா் அரிவாளால் வெட்டினாராம். இதில் இருவரும் காயமடைந்தனா்.
காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிவகிரி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து வீரபாண்டியை கைது செய்தாா்.