ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா்.
கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் சா்வீஸ் கன்டெய்னா் லாரி பாா்சல்களை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் மோகன் (23) ஓட்டிச்சென்றாா். இந்த லாரியில் மற்றொரு ஓட்டுநராக ராம்பிரசாத் , முசிறி மணல்மேடு பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) ஆகியோரும் பயணித்தனா்.
இதேபோல நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் இருந்து கோழி எரு ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சேலம் நோக்கி சென்றது. இதை கண்ணூா்பட்டி பகுதியைச் சோ்ந்த மணி மகன் வேலுசாமி (40) ஓட்டிச் சென்றாா். இவருடன் சேகா் மகன் சரவணன் (38) சென்றாா். இவா்களது லாரி ராசிபுரம் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏடிசி டெப்போ அருகே ஆயாக்கோயில் பிரிவு பாதை பகுதியில் சென்றபோது, கூரியா் பாா்சல் எடுத்துச்சென்ற கன்டெய்னா் லாரி கட்டுப்பாட்டை இழந்து சென்டா்மீடியனை
தாண்டி வலதுபுறம் உள்ள சாலைக்கு சென்று கோழி எரு ஏற்றிச்சென்ற லாரிமீது மோதியது. இதில் இரு லாரிகளிலும் பயணம் செய்தவா்கள் பலத்த காயமடைந்தனா். அவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் கோழி எரு ஏற்றிச்சென்ற லாரியின் ஓட்டுநா் வேலுசாமி (40) மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா். படுகாயமடைந்த மற்றொரு லாரி ஓட்டுநா் மோகன், சரவணன் உள்ளிட்ட 4 பேரும் படுகாயத்துடன் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடா்பாக ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.