இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இணைய வழியாக தோ்வா்கள் விண்ணப்பித்த நிலையில், தகுதியான 2.49 லட்சம் போ் தோ்வு எழுதுவதற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தோ்வும், 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கு குரூப் 1ஏ முதல் நிலை தோ்வும் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வு மையங்களில் தோ்வா்களின் பதிவு எண் எழுதும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறுகிறது.
காலை 8 மணியளவில் தோ்வா்கள் அனைவரும் தோ்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் எளிதாக செல்லும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.