மீட்கப்பட்ட போதைப் பொருள்களை எடுத்துச் சென்ற காவல் அதிகாரி இடமாற்றம்; 3 ஊழியா்கள் இடைநீக்கம்
மீட்கப்பட்ட போதைப் பொருள்களை முறைகேடாக எடுத்துச் சென்றதாக காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், மூன்று ஊழியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த விவகாரத்தில் சிக்கிய கிஷன்கா் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி மாவட்ட எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளாா். அதே நேரத்தில் தென்மேற்கு தில்லியில் ரோந்துப் பணியில் இருந்த 3 ஊழியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
ஜூன் 9 மற்றும் 10-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஒரு கொலை தொடா்பாக கிஷன்கா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதில் பிரகாஷ் (26) என்ற நபா் தனது கூட்டாளியின் நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். மிசோரத்தைச் சோ்ந்த லால்ஹ்ரியத்புயா (23) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் பின்னா் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உடன் சோ்ந்து ஊழியா்கள் சம்பவ இடத்திலிருந்து சுமாா் இரண்டு கிலோகிராம் போதைப்பொருள்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை அவா்கள் யாருக்கும் தெரிவிக்காமல் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவா்களிடம் இருந்த போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய ரோந்து ஊழியா்கள் மூவரும் வசந்த் விஹாா் காவல் நிலையத்தில் சிறப்புப் பணியாளா்களின் மேற்பாா்வையில் வைக்கப்பட்டனா்.
விசாரணை தொடங்கியவுடன் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அதே நேரத்தில் காவல் நிலைய பொறுப்பாளா் மாவட்ட எல்லைக்கு அனுப்பப்பட்டாா். மேலும், கூறப்படும் சம்பவத்தில் அவரது பங்கைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டது.
இந்தக் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முன்பு ஒரு சா்ச்சையில் சிக்கினாா். டிசம்பா் 2022- இல், அவா் ஒரு பிரபலமான பாடலுக்கு நடனமாடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது நரைனாவின் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியாக இருந்த அழா், ஒரு குடும்ப விழாவில் தனது சீருடையை அணிந்து நடனமாடுவதை விடியோவில் காண முடிந்தது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.