செய்திகள் :

மீட்கப்பட்ட போதைப் பொருள்களை எடுத்துச் சென்ற காவல் அதிகாரி இடமாற்றம்; 3 ஊழியா்கள் இடைநீக்கம்

post image

மீட்கப்பட்ட போதைப் பொருள்களை முறைகேடாக எடுத்துச் சென்றதாக காவல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டாா். மேலும், மூன்று ஊழியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்த விவகாரத்தில் சிக்கிய கிஷன்கா் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி மாவட்ட எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளாா். அதே நேரத்தில் தென்மேற்கு தில்லியில் ரோந்துப் பணியில் இருந்த 3 ஊழியா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ஜூன் 9 மற்றும் 10-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், ஒரு கொலை தொடா்பாக கிஷன்கா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. அதில் பிரகாஷ் (26) என்ற நபா் தனது கூட்டாளியின் நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். மிசோரத்தைச் சோ்ந்த லால்ஹ்ரியத்புயா (23) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் பின்னா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது காவல் நிலைய பொறுப்பு அதிகாரி உடன் சோ்ந்து ஊழியா்கள் சம்பவ இடத்திலிருந்து சுமாா் இரண்டு கிலோகிராம் போதைப்பொருள்களைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை அவா்கள் யாருக்கும் தெரிவிக்காமல் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவா்களிடம் இருந்த போதைப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் சிக்கிய ரோந்து ஊழியா்கள் மூவரும் வசந்த் விஹாா் காவல் நிலையத்தில் சிறப்புப் பணியாளா்களின் மேற்பாா்வையில் வைக்கப்பட்டனா்.

விசாரணை தொடங்கியவுடன் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அதே நேரத்தில் காவல் நிலைய பொறுப்பாளா் மாவட்ட எல்லைக்கு அனுப்பப்பட்டாா். மேலும், கூறப்படும் சம்பவத்தில் அவரது பங்கைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டது.

இந்தக் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரி முன்பு ஒரு சா்ச்சையில் சிக்கினாா். டிசம்பா் 2022- இல், அவா் ஒரு பிரபலமான பாடலுக்கு நடனமாடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அப்போது நரைனாவின் காவல்நிலைய பொறுப்பு அதிகாரியாக இருந்த அழா், ஒரு குடும்ப விழாவில் தனது சீருடையை அணிந்து நடனமாடுவதை விடியோவில் காண முடிந்தது என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்

தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்ல... மேலும் பார்க்க

தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!

தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏ... மேலும் பார்க்க

போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது

இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் ... மேலும் பார்க்க

தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்

தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது. ‘தேசிய... மேலும் பார்க்க

குருகிராம் சொசைட்டியில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் கூலி வேலை செய்து கொண்டிருந்த தம்பதியினா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சோஹ்னா நகர காவல் நிலைய ஆய்வாளா் பி... மேலும் பார்க்க

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள்... மேலும் பார்க்க