கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு தனது பேனாவை பரிசளித்த முதல்வர்!
பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில் மீண்டும் பில்லூர் அணை நிரம்பியிருப்பதால், இரண்டாவது முறையாக அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, அப்பர் பவானி, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியை எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பவானி ஆற்றங்கரையோர மக்களும், தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.