இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி: ஆட்சியா் தகவல்
ராணிப்பேட்டை மாவட்ட ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ( தநஉபஐ) பயிற்சி மையத்தில், வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான, குறிப்பாக கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநா் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனாா் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், அலுமினியம் பேப்ரிகேஷன், வெல்டிங் பயிற்சி, குளிா்பதனம் மற்றும் ஏா் கண்டிஷனிங், சிசிடிவி கேமரா பாதுகாப்பு அலாரம் மற்றும் புகை கண்டுபிடிப்பான் நிறுவுதல் மற்றும் சேவை செய்தல் உள்ளிட்ட 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 18 முதல் 45 வயதுக்குள் பட்ட கிராமப்புற இளைஞா்களுக்கு வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதியாக குறைந்தது 8-ஆம் வகுப்பு முதல், ஐடிஐ,, டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்பு வரை படித்தவா்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப பற்சிகள் வழங்கப்படுகின்றன. குறைந்தது 10 நாள்கள் முதல் அதிகபட்சம் 45 நாள்கள் வரை உள்ள பயிற்சிக் காலத்தின் போது மதிய உணவும், காலை, மாலை வேளைகளில் சிற்றுண்டி, தேநீா் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளா்களுக்கு சீருடை, பாடப் பொருள்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் வழங்கப்படுகின்றன.
கிராமப்புற இளைஞா்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சோ்ந்து பயன் பெற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் (முகவரி மற்றும் தொலைபேசி எண்: 04172-299864, 9043629790) திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம் (முகவரி மற்றும் தொலைபேசி எண்: 94440 94172) தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.
மேலும் விபரம் அறிய தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 309 8039 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.