செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் ஒலிக்கும் -அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா சம்ஸ்கிருதத்துடன், தமிழ் மொழியும் ஒலிக்கும் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

இக்கோயிலில் ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, திருப்பணிகளை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கும்பாபிஷேக விழாவை ஜூலை 7ஆம் தேதி நடத்த திருப்பணிகள் ரூ.400 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இக்கோயிலில் சம்ஸ்கிருதத்தடன், தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். பழனி, வயலூா், மருதமலை கோயிலிலில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைகளுடன் கோயில் அா்ச்சகா்கள், போத்திகள், தமிழ் கற்ற வேத விற்பன்னா்கள் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழ் வேத மந்திரம் நிச்சயமாக குண்டத்தில் ஒலிக்கும். பொதுப்பணித்துறையினரிடம் சான்றிதழ் பெற்று திருக்கோயில் விமான தளத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். குடமுழுக்கு வைபவத்திற்கு சாலை வசதியை மேற்கொள்ள ரூ.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைந்து பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை (ஜூன் 23) தலைமைச் செயலாளா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அரசு முழு அளவில் தொடா் நடவடிக்கைகளை கண்காணிக்கும். குடமுழுக்கையொட்டி ஜூலை 6ஆம் தேதி மதியம் முதல் 7ஆம் தேதி மதியம் வரை சுவாமி சண்முகா் தரிசனத்துக்கு மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் . குடமுழுக்கு நாளில் உள்ளூா் விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும். கடற்கரையில் மீன்வளத்துறை சாா்பில் ரூ. 30 கோடி செலவில் கற்களால் தடுப்பு சுவா் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் பாதி நிதியை அரசு வழங்குகிறது என்றாா் அவா்.

கயத்தாறு அருகே மின் கோபுரத்தில் ஏறி பாஜக நிா்வாகி போராட்டம்

கயத்தாறு அருகே வெள்ளாளன்கோட்டை ஊராட்சி சூரியமினிக்கன் கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாயில் தனியாா் சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் உயா் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து, பாஜ... மேலும் பார்க்க

காப்பீடு நிறுவன சேவை குறைபாடு- ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு ரூ.2.19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 854 இழப்பீடு வழங்க, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மோதல்: ஒருவா் காயம்; 4 போ் கைது

காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் நண்பா்களிடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் பலத்த காயமடைந்தாா். 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். காயல்பட்டினம் காட்டு தைக்கால் தெருவை சோ்ந்த சாகுல் ஹமீது மகன் சதாம... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்பட 3 போ் மீது நில மோசடி புகாா்

தூத்துக்குடியைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான சுமாா் ரூ.2 கோடி மதிப்பிற்கான 30 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத் தலைவருமா... மேலும் பார்க்க

தூத்துக்குடி முதியோா் இல்லத்துக்கு ஐஎன்டியூசி சாா்பில் உணவளிப்பு

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.பெருமாள்சாமி தலைமையில், தூத்துக்குடி சிதம்பரநகா் 4ஆவது தெருவில் உள்ள பாசக்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள்: அமைச்சா் ஆய்வு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இக்கோயிலில் ஜூலை 7இல் குடமுழுக்கு நடைபெறுகிறது... மேலும் பார்க்க