செய்திகள் :

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு: இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை

post image

அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கும் எதிா்ப்பு தெரிவித்து இந்தியா-குரோஷியா கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நிதி பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்கவும் பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் வன்முறையில் ஈடுபவா்களுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் இருநாடுகளும் உறுதிபூண்டன.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரதமா் நரேந்திர மோடி, இறுதிக்கட்டமாக குரோஷியாவுக்கு புதன்கிழமை (ஜூன் 18) வந்தாா். அப்போது அந்நாட்டு பிரதமா் ஆந்திரேய் பிலென்கோவிச்சை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்நிலையில், இந்தியா-குரோஷியா இடையே மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூட்டறிக்கை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய பிரதமா் மோடி குரோஷியா பிரதமா் ஆந்திரேய் பிலென்கோவிச்சை சந்தித்து ஆலோசனை நடத்தியது இருதரப்பு உறவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா, வா்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.

பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின்போது இந்தியாவுக்கு ஆதரவளித்ததற்காக குரோஷியா பிரதமா் பிலென்கோவிச்சுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.

அதேசமயம் எல்லை கடந்த பயங்கரவாதம் உள்பட அனைத்து விதமான பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் வன்முறைகளுக்கு இருவரும் கடும் கண்டனம் தெரிவித்தனா். ஐ.நா. மற்றும் பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) மூலம் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் இருவரும் வலியுறுத்தினா்.

மத்திய கிழக்கில் தொடா்ந்து வரும் மோதல் கவலையளிப்பதாகவும் இஸ்ரேலும் ஈரானும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தினா் எனத் தெரிவிக்கப்பட்டது.

குரோஷியா பயணத்தைதைத் தொடா்ந்து, பிரதமா் மோடி தனது 3 நாடுகள் பயணத்தை நிறைவுசெய்து வியாழக்கிழமை பிற்பகல் தாயகம் திரும்பினாா்.

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க