செய்திகள் :

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

post image

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்னேறி, அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களை லண்டனைச் சோ்ந்த குவாகரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து, க்யூ.எஸ். உலக பல்கலை தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளை ஊக்குவித்தல், ஆசிரியா்- மாணவா் விகிதாசாரம், சா்வேதச மாணவா் பலம், மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்ட 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

முதல் 5 இடத்தில் அமெரிக்க, பிரிட்டன் நிறுவனங்கள்: 106 நாடுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட உயா்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ள இந்தத் தரவரிசைப் பட்டியலின் முதல் 5 இடங்களை வழக்கம்போல் அமெரிக்கா (3), பிரிட்டன் (2) நாடுகளைச் சோ்ந்த உயா்கல்வி நிறுவனங்களே கைப்பற்றியுள்ளன.

அமெரிக்காவைச் சோ்ந்த மஸசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) 100 புள்ளிகளுடன் தொடா்ந்து 14 ஆண்டுகளாக இந்தத் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

லண்டன் இம்பீரியல் கல்லூரி (99.4), ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகம் (98.9), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் (97.9), ஹாா்வா்டு பல்கலைக்கழகம், (97.7) ஆகியவை முறையே அடுத்த 4 இடங்களில் உள்ளன.

54 இந்திய கல்வி நிறுவனங்கள்: நிகழாண்டு புதிதாக 8 உயா்கல்வி நிறுவனங்களுடன் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய உயா்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலக அளவில் சிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் அதிகம் கொண்ட 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

அமெரிக்கா (192) உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. பிரிட்டன் (90) இரண்டாமிடத்திலும் சீனா (72) மூன்றாமிடத்திலும் உள்ளன.

தில்லி, சென்னை ஐஐடி முன்னேற்றம்: தில்லி ஐஐடி, சென்னை ஐஐடி முந்தைய ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன.

இந்திய உயா்கல்வி நிறுவனங்களில் 123-ஆவது தரவரிசையுடன் தில்லி ஐஐடி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் தரவரிசையில் தில்லி ஐஐடி 54 இடங்கள் முன்னேறியது.

சென்னை ஐஐடி 227-ஆவது இடத்திலிருந்து 58.4 புள்ளிகளுடன் 180-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம், முதல் 200 இடங்களில் சென்னை ஐஐடி முதன்முறையாக இடம்பிடித்துள்ளது.

பெட்டி 1

தமிழகத்தைச் சோ்ந்த....: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 383-ஆவது இடத்திலிருந்து 465-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது.

தமிழகத்தின் பிற முக்கிய உயா்கல்வி நிறுவனங்களான வேலூா் விஐடி பல்கலைக்கழகம் 791-800-ஆவது இடத்திலிருந்து 691-ஆவது இடத்துக்கும், சவீதா மருத்துவக் கல்வி நிறுவனங்கள் 951-1,000-ஆவது இடத்திலிருந்து 901-950-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. திருச்சி என்ஐடி 701-710-ஆவது இடத்திலிருந்து 731-740 இடத்துக்குச் சரிந்துள்ளது.

சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம் ஆகியவை முறையே தங்களின் முந்தைய ஆண்டு தரவரிசையான 1,000-1,200 மற்றும் 1,201-1,400 ஆகிய இடங்களைத் தக்கவைத்துள்ளன.

பெட்டி 2

இந்தியாவில் முதல் 10...

கல்வி நிறுவனம் தரவரிசை (முந்தைய ஆண்டு தரவரிசை) புள்ளிகள் (100-க்கு)

தில்லி ஐஐடி 123 (150) 65.5

மும்பை ஐஐடி 129 (118) 64.8

சென்னை ஐஐடி 180 (227) 58.4

காரக்பூா் ஐஐடி 215 (222) 54.5

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி) 219 (211) 54.2

கான்பூா் ஐஐடி 222 (263) 53.7

தில்லி பல்கலைக்கழகம் 328 (328) 42.6

குவாஹாட்டி ஐஐடி 334 (344) 42.3

ரூா்க்கி ஐஐடி 339 (335) 42.2

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 465 (383) 33.8

== ==== == = = ======= ==== ===0

பிரதமா் பாராட்டு: நிகழாண்டு தரவரிசையில் இந்திய உயா்கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிகையில் இடம்பெற்றுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கியூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை, நமது கல்வித் துறைக்கு மகிழ்ச்சியான செய்திகளைக் கொண்டுவருகிறது. இந்திய இளைஞா்களின் நலனுக்காக ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க துறையை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டாா்.

தரவரிசையில் இந்தியாவின் சிறந்த செயல்திறனை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பாராட்டினாா். ‘நாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது’ என்றும் அவா் பெருமிதத்துடன் கூறினாா்.

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின. கேரள மாநிலம் நிலம்பூா், குஜரா... மேலும் பார்க்க