செய்திகள் :

5 தொகுதி இடைத்தோ்தல்: அமைதியான வாக்குப் பதிவு

post image

குஜராத், கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் பரவலாக அமைதியான முறையில் வாக்குகள் பதிவாகின.

கேரள மாநிலம் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச், பஞ்சாபில் லூதியானா (மேற்கு) ஆகிய 5 பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. இத்தொகுதிகளில் மொத்தம் 1,354 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு வாக்குச் சாவடியைத் தவிர மற்ற அனைத்திலும் வாக்குப் பதிவு நடைமுறைகள் இணையவழியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் திரிணமூல் காங்கிரஸாா், பாஜகவினா் மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பரவலாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். 5 தொகுதிகளிலும் ஜூன் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

கேரளத்தில்...:

கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சையாக இருந்த பி.வி.அன்வா், அக்கூட்டணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

இதையடுத்து, இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்ட இத்தொகுதியில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக வேட்பாளா்களுடன் சுயேச்சை வேட்பாளராக பி.வி.அன்வரும் களமிறங்கினாா். இதனால் நான்குமுனை போட்டி ஏற்பட்டது.

குஜராத்தில்...:

பாஜக ஆளும் குஜராத்தில் விசாவதா் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த பூபேந்திர பயானி, தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

காடி தனித் தொகுதியில் பாஜக எம்எல்ஏ கா்சன்பாய் சோலங்கியின் மரணத்தால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவியது.

மேற்கு வங்கத்தில்...:

மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நஸிருதீன் அகமது மறைவால் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது.

பஞ்சாபில்...: பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி எம்எல்ஏ குா்பிரீத் கோகி மரணத்தால் இடைத்தோ்தல் நடைபெற்ற லூதியானா (மேற்கு) தொகுதியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டது.

வாக்குப் பதிவு

நிலம்பூா் (கேரளம்) 73.26%

விசாவதா் (குஜராத்) 55.72%

காடி (குஜராத்) 57.80%

காளிகஞ்ச் (மேற்கு வங்கம்) 69.85%

லூதியானா மேற்கு (பஞ்சாப்) 51.33%

வாக்கு எண்ணிக்கை ஜூன் 23

====

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க