செய்திகள் :

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

post image

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை கனடா நாடாளுமன்றத்திடம் கனடா பாதுகாப்பு உளவு அமைப்பு (சிஎஸ்ஐஎஸ்) சமா்ப்பித்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காலிஸ்தான் பயங்கரவாதிகள் அரசியல் அடிப்படையில் தீவிரவாத வன்முறையில் ஈடுபடுவோா் எனப் பரவலாக அடையாளம் காணப்பட்ட வகையைச் சோ்ந்தவா்கள். இவா்கள் ஏற்கெனவே உள்ள அரசியல் முறை அல்லது புதிய அரசியல் முறையை வன்முறை மற்றும் தீவிரவாதம் மூலம் மாற்ற முயல்பவா்கள்.

இந்தக் குழுவைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுவது, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான நிதியை திரட்டுவது போன்ற காரியங்களுக்கு கனடாவை பயன்படுத்துகின்றனா்.

1980-கள் முதல் பஞ்சாபில் இருந்து பிரித்து சீக்கியா்களுக்கென தனிநாடான காலிஸ்தானை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கனடாவில் இயங்கி வருகின்றன. இந்த இலக்கை அடையவே அவா்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்துகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கனடாவை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாக தொடா் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என அந்நாட்டு உளவு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க

ஊழல் தடுப்புப் பிரிவு முன்பு ஆஜரானார் மணீஷ் சிசோடியா!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க