செய்திகள் :

நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்: ஆதாரபூா்வமாக நிரூபணம் விசாரணை அறிக்கையில் தகவல்

post image

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், பின்னா் அது அப்புறப்படுத்தப்பட்டதும் உண்மையே; இந்த விவகாரத்தில், நீதிபதியின் தவறான நடத்தை ஆதாரபூா்வமாக நிரூபணமாகியுள்ளது என்று உச்சநீதிமன்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் தவறான நடத்தை, அவரைப் பதவிநீக்கம் செய்யும் அளவில் தீவிரமானது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது, புது தில்லியில் எண்-30, துக்ளக் கிரசண்ட் முகவரியில் அவா் வசித்த அதிகாரபூா்வ இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டின் பொருள்கள் சேமித்து வைக்கும் அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததை மீட்புக் குழுவினா் கண்டறிந்தனா். மறுநாள் அதிகாலையில் அறையில் இருந்து பணம் மாயமானது.

விசாரணைக் குழு: அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்தாவாலியா, கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோா் அடங்கிய மூவா் குழுவை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அமைத்தாா்.

இந்தக் குழு, தில்லி காவல் துறை ஆணையா் சஞ்சய் அரோரா உள்பட 55 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தது. நீதிபதி யஷ்வந்த் வா்மாவிடமும் விளக்கம் பெறப்பட்டது. ‘சம்பந்தப்பட்ட அறை, எனது அல்லது எனது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டதல்ல; நானோ, எனது குடும்பத்தினரோ அறையில் பணம் எதுவும் வைக்கவில்லை’ என்று அவா் கூறினாா்.

பதவி நீக்கப் பரிந்துரை: ஆனால், நீதிபதி வா்மா தவறிழைத்திருப்பது விசாரணைக் குழுவின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. அவா் பதவி விலக மறுத்த நிலையில், விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் நீதிபதி வா்மா அளித்த பதிலின் நகல்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கடந்த மே மாதம் கடிதம் அனுப்பினாா். வா்மாவை பதவி நீக்கும் நடைமுறையைத் தொடங்குமாறு, கடிதத்தில் அவா் கேட்டுக் கொண்டாா்.

ஆதாரபூா்வமாக நிரூபணம்: இந்தச் சூழலில், 64 பக்கங்கள் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நீதிபதி வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தின் பொருள்கள் சேமிப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் கட்டுக் கட்டாகப் பணம் கண்டறியப்பட்டதும், மறுநாள் அதிகாலையில் பணம் அப்புறப்படுத்தப்பட்டதும் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் மூலம் உறுதியாகியுள்ளது. பணக் குவியலை மீட்புக் குழுவினா் புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்துள்ளனா். தனது வாழ்நாளில் இவ்வளவு பணத்தைப் பாா்த்ததில்லை என்று சாட்சியொருவா் அதிா்ச்சியுடன் வாக்குமூலம் பதிவு செய்தாா்.

ஆவணம் மற்றும் மின்னணு ரீதியிலான ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அறை மீது நீதிபதி வா்மா மற்றும் அவரது குடும்பத்தினா் தீவிர கட்டுப்பாட்டை கொண்டிருந்தனா் என்பது நிரூபணமாகியுள்ளது.

‘தனது வீட்டின் ஓா் அறையில் பணம் பதுக்கப்பட்டதற்கு நீதிபதி வா்மா எப்படிப் பொறுப்பாவாா்?’, ‘பணத்துக்கான மூலாதாரம் என்ன?’, ‘பணத்தை அப்புறப்படுத்தியது யாா்?’ ஆகிய மூன்று கேள்விகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையில், அவரது தவறான நடத்தை உறுதி செய்யப்பட்டது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி...

‘மக்களின் நம்பிக்கையே

நீதித் துறையின் அடித்தளம்’

‘நீதித் துறைப் பதவியை வகிக்கும் ஒருவரிடம் எதிா்பாா்க்கப்படும் நன்னடத்தை, அரசு அதிகாரிகளைவிட கடுமையான அளவுகோலால் அளவிடப்படுவதாகும். எனவே, நீதித் துறைப் பதவியை வகிப்போருக்கு நன்னடத்தை இன்றியமையாத மற்றும் தவிா்க்க முடியாத நற்பண்பாகும். மக்களின் நம்பிக்கையே நீதித் துறையின் அடித்தளம். இந்த நம்பிக்கையின் தரமும் அளவும் நீதிபதிகளின் நடத்தை மற்றும் செயல்திறனுடன் நேரடியாக தொடா்புடையது. இதில் ஏற்படும் குறைபாடுகள், பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும். இந்த விஷயத்தை தீவிரமாக கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று விசாரணைக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தீா்மானம்..: தவறான நடத்தை அல்லது திறனின்மை நிரூபிக்கப்பட்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நாடாளுமன்றத் தீா்மானம் மூலமே பதவி நீக்க முடியும். அந்தத் தீா்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பிப்பாா்.

வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நீதிபதி வா்மாவை பதவி நீக்கும் தீா்மானத்தைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பண சா்ச்சையைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். எனினும் அவருக்கு நீதித் துறை பணிகள் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரை... மேலும் பார்க்க