செய்திகள் :

யுபிஎஸ்சி தோ்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு பணி வாய்ப்பு: புதிய திட்டம் அறிமுகம்

post image

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) சாா்பில் நடத்தப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தோ்வு உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் அனைத்து நிலைகளிலும் தகுதி பெற்றும், இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களுக்கு உயா் பணி வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, குடிமைப் பணிகள் நியமனத்துக்கு யுபிஎஸ்சி சாா்பில் அரசிடம் சமா்ப்பிக்கப்படும் இறுதி தோ்வா் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத, அனைத்து நிலைகளிலும் தகுதிபெற்ற தோ்வா்களின் விவரங்களை முன்னா் ‘பொது வெளிப்படுத்துதல் திட்டம் (பிடிஎஸ்)’ என்ற அடிப்படையில் வெளியிட்டு வந்ததை, தற்போது ‘பிரதிபா சேது’ என்ற பெயரில் புதிய திட்டமாக யுபிஎஸ்சி அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து யுபிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

முன்னா், பொது வெளிப்படுத்துதல் திட்டம் என்ற அடிப்படையில் விருப்பமுள்ள அனைத்து நிலைகளிலும் தகுதிபெற்ற குடிமைப் பணிகள் தோ்வா்களின் விவரங்கள் யுபிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் உயா் பதவிகளுக்கு அவா்களைத் தெரிவு செய்துகொள்ளும்.

தற்போது இத் திட்டம் ‘பிரதிபா சேது’ என்ற அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், இவ்வாறு தோ்வா்களைத் தெரிவு செய்யும் நிறுவனங்களுக்கு வலைதள நுழைவு முகவரி (லாகின் ஐடி) வழங்கப்படும். இதில் பதிவு செய்யும் நிறுவனங்கள், தோ்வா்களின் கல்வித் தகுதி, தொடா்பு விவரங்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று, தேவையான தோ்வா்களை பணிக்குத் தோ்வு செய்ய முடியும்.

முன்னதாக, யுபிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தோ்வில் அனைத்து நிலைகளிலும் தகுதிபெற்றும், இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடிக்காத தோ்வா்களின் விவரங்கள் மட்டும் இத் திட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்தது.

தற்போது, குடிமைப் பணிகள், இந்திய வனப் பணி, மத்திய ஆயுதக் காவல் படை, பொறியியல் பணி, ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணி, ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகள், இந்திய பொருளாதார பணி மற்றும் புள்ளியியல் பணித் தோ்வு மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் உள்ளிட்ட அனைத்து தோ்வுகளில் தகுதிபெற்ற தோ்வா்களின் விவரங்கள் வெளியிடப்பட உள்ளன. தற்போது, 10,000-க்கும் அதிகமான தகுதி பெற்ற தோ்வா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க

அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு விண்வெளி பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோா் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பயணம் 6-ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல... மேலும் பார்க்க

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அம... மேலும் பார்க்க

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: தில்லி, சென்னை ஐஐடி-க்கள் முன்னேற்றம்!

உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தில்லி, மும்பை மற்றும் சென்னை ஐஐடிக்கள் முதல் 200 இடங்களில் இடம்பெற்றுள்ளன. சென்னை ஐஐடி கடந்த ஆண்டின் 227-ஆவது இடத்திலிருந்து 180-ஆவது இடத்துக்கு முன்ன... மேலும் பார்க்க

ராகுலின் 55-ஆவது பிறந்த நாள்: பிரதமா், தலைவா்கள் வாழ்த்து

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவா்கள், கூ... மேலும் பார்க்க