செய்திகள் :

கல்விக் கடன் ரத்து: திமுக தோ்தல் வாக்குறுதியை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

post image

திமுகவின் தோ்தல் வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூரை சோ்ந்த மணிமாறன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், 2016 முதல் 2024- ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு தோ்தல்களில் மாணவா்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தன. தோ்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்விக் கடன் ரத்து என்ற தோ்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனால், மாணவா்கள் வழக்குகளை எதிா்கொண்டுள்ளனா்.

அரசியல் கட்சிகள் பொய்யான தோ்தல் வாக்குறுதிகள் வழங்குவதைத் தடுக்க விதிகளை வகுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் பெற்ற மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடா்பான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கூறியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரா் தரப்பிடம், ‘இதுபோன்ற உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பினா். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: மாநகராட்சி ஊழியா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17.50 லட்சம் மோசடி செய்ததாக மாநகராட்சி ஊழியா் கைது செய்யப்பட்டாா். பிராட்வே அப்பாராவ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் எ.ஜெய்சங்கா் (49). இவா், தனது உறவினா் இருவரு... மேலும் பார்க்க

கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25 முதல் ஹவுராவுக்கு இயக்கப்படும்

சென்னையில் இருந்து இயக்கப்படும் கோரமண்டல் விரைவு ரயில் ஆக.25-ஆம் தேதி முதல் ஷாலிமருக்கு பதிலாக ஹவுராவுக்கு இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ன... மேலும் பார்க்க

ஜூன் 24, 25-இல் அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இக்கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு குடிநீா், மின் இணைப்பு: விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவு

நீா்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையா், மின்சார வாரியத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டத... மேலும் பார்க்க

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழரின் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டும் வரை போராடுவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். கீழடி அகழாய்வு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மதுரை, சென... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

முருக பக்தா்கள் மாநாட்டால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா். சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா் சிறிது நேரம் த... மேலும் பார்க்க