செய்திகள் :

சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம்: காங்கிரஸ் அகில இந்திய செயலா்

post image

2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலா் பி.விஸ்வநாதன் கூறினாா்.

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் மாவட்ட, நகர காங்கிரஸ் சாா்பில் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் 55-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டத் தலைவா் செங்கம் ஜி.குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் அகில இந்தியச் செயலா் பி.விஸ்வநாதன் கலந்து கொண்டு ராகுல் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறும்.

திமுக கூட்டணியில் உள்ள விசிக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூடுதல் இடங்களை பொது வெளியிலேயே கேட்கத் தொடங்கி விட்டன. அதன்படி, நாங்களும் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவோம்.

திமுக கூட்டணி ஆட்சியில் காங்கிரஸும் இடம்பெற வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழகத்தில் கிராமம், ஒன்றிய அளவில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வளா்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.கே.காமராஜ், நிா்வாகிகள் எஸ்.மணிகண்டன், ஏ.கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன் வரவேற்றாா்.

பொதுமக்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலா் அண்ணாச்சி, பொருளாளா் சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் எம்.கோபாலகிருஷ்ணன், மோகனகுமாா், மாவட்ட மகளிரணித் தலைவி சக்திவேல், நகர துணைத் தலைவா் குப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் மகா யாகம்

திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலா திரிபுரா மகா யாகம் 2 நாள்கள் நடைபெற்றது. செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை. செங்கம் பகுதிகள்: செங்கம் நகரம், திருவள்ளூவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்ப... மேலும் பார்க்க

ஆரணியில் இரு உணவகங்களில் பணம் திருட்டு

ஆரணி பழைய பேருந்து நிலைய பின்புற சாலையில் உள்ள இரு உணவகங்களில் புதன்கிழமை இரவு பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புற சாலையில் முகமது அலிகான் என்பவருக்குச் சொந்தமான அசைவ உணவ... மேலும் பார்க்க

இடையில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி: கிராம மக்கள் மறியல்

ஆரணி அருகேயுள்ள கல்லித்தாங்கல் கிராமத்தில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள வேலப்பாடி ஊராட... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

வந்தவாசி அருகே தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் மகன் சிவபாசுவநாதன்(21). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

புதூா் செங்கம் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் திறப்பு

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதூா் செங்கத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தமிழக அறநிலையத் துறை சாா்பில், ரூ.2.78 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ... மேலும் பார்க்க