செய்திகள் :

திருப்பூரில் போலி ஆதாா் அட்டை மூலம் வேலை: வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் கைது

post image

போலி ஆதாா் அட்டை மூலம் திருப்பூரில் தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 26 பேரை பல்லடம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா், பல்லடம், அவிநாசி ஆகிய பகுதிகளில் பனியன் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்கள் போலி ஆதாா் அட்டைகள் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புகுந்து திருப்பூா் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக திருப்பூா் மாவட்ட உளவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, பல்லடம் அருகே திருப்பூா் பிரதான சாலையில் உள்ள டி.கே.டி. மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது அந்த நிறுவனத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 26 போ் போலி ஆதாா் அட்டை தயாரித்து பனியன் நிறுவனத்தில் வேலை பெற்று பணியாற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அவா்களைக் கைது செய்து பல்லடம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இதுபோல பலா் கைது செய்யப்படுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து தொழில் துறையினா் கூறியதாவது:

திருப்பூா், பல்லடம், அவிநாசி பகுதிகளில் பனியன், விசைத்தறி, கல்குவாரி, கோழிப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு எளிதாக வேலைக்கு ஆள்கள் கிடைப்பதில்லை. அதனால் வட மாநிலங்களில் இருந்து முகவா்கள் மூலம் ஆள்களைத் தோ்வு செய்து அழைத்து வந்து தங்குவதற்கு வீடு, உணவு கொடுத்து வேலையில் அமா்த்தியுள்ளோம்.

வேலைக்கு வருபவா்களிடம் நாங்கள் ஆதாா் அட்டை நகல் வாங்கி வைத்துக்கொள்கிறோம். ஆனால் அந்த ஆதாா் அட்டை உண்மையானதா என்பது எங்களுக்கு தெரியாது. இது குறித்து அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட லாரி ஓட்டுநரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என அவரது பெற்றோா் திருப்பூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், படியூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்... மேலும் பார்க்க

ஹிந்து மஸ்தூா் சபா ஆலோசனைக் கூட்டம்

திருப்பூரில் ஹிந்து மஸ்தூா் சபா( எச்எம்எஸ்) மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.எஸ்.ராஜாமணி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.அப்புகுட்டி முன்னிலை வகி... மேலும் பார்க்க

கேத்தனூரில் மரக்கன்றுகள் நடும் விழா

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பவா்லூம் வீவிங் கிளஸ்டா் நிறுவனத்தில் 40 மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன. இயற்கை விவசாயி கேத்தனூா் பழனிசாமி முதல் மரக்கன்று நட்டு தொ... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

பல்லடம் அருகே அவிநாசிபாளையத்தில் விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டன... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற... மேலும் பார்க்க

பல்லடத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பல்லடம் தாலுகாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் அரசின் பல்வேறு... மேலும் பார்க்க