'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 100 போ் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்களுக்கு வாழ்வூதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் தமிழகம் முழுவதும் தொடா் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் அவா்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா்- பல்லடம் சாலையில் அமா்ந்து திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அவா்களிடம் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீஸாா் அவா்களைக் கைது செய்து தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள் உள்பட சுமாா் 100 போ் கைது செய்யப்பட்டனா். இந்தப் போராட்டத்தால் திருப்பூா்- பல்லடம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.