செய்திகள் :

ஒடிசாவில் அதிகரித்துவரும் வன்கொடுமைகள்: 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

post image

ஒடிசா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில்,

மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களாக பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து வருகின்றது. இதையடுத்து வன்கொடுமை மற்றும் பெண்கள் காணாமல் போவது உள்ளிட்ட குற்றங்களின் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு 5 பேர் கொண்ட பெண் தலைவர்களின் குழுவுக்கு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது.

ஒடிசாவின் கோபால்பூரில் பதிவான கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், கடந்த சில ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்படுவது போன்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் தலைவர் ஒடிசாவிற்குச் சென்று நிலைமை குறித்த விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க உண்மை கண்டறியும் குழுவை நியமித்துள்ளார் என்று அவர் கூறினார்.

உண்மை கண்டறியும் குழுவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபா தாஸ்முன்ஷி குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் ரஞ்சித் ரஞ்சன், பிரணிதி ஷிண்டே மற்றும் எஸ். ஜோதிமணி மற்றும் ஷோபா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒடிசாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கோபால்பூர் கடற்கரையில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் 20 வயது பெண்ணை சுமார் 10 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜ் பண்டிகையை முன்னிட்டு, கல்லூரி மாணவி அவருடன் 3 பெண் தோழிகள் மற்றும் அவரது ஆண் நண்பருடன் கடற்கரைக்குச் சென்றபோது, அங்கிருந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்த பெண்ணை மாறிமாறி வன்கொடுமை செய்துள்ளனர்.

இளங்கலை மாணவி அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார். இதுதொடர்பாக திங்களன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதையடுத்து கோபால்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க: உலக தரவரிசை பட்டியலில்.. 54 இந்தியக் கல்வி நிறுவனங்கள்: மோடி பெருமிதம்!

என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு..? மீண்டும் தில்லிக்கே திரும்பிய விமானம்!

தில்லியிலிருந்து வியட்நாம் நாட்டுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் மீண்டும் தில்லியிலேயே தரையிறக்கப்பட்டது. தில்லியிலிருந்து வியட்நாமின் ஹோ சி மின் நகரத்துக்கு இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஆர்சிபி கூட்ட நெரிசல் விவகாரம்! 3 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதத்துடன் மசோதா முன்மொழிவு!

பெங்களூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மசோதா முன்மொழியப்பட்டது.ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பை வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூரில... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியைப் புகழ்ந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர்!

பாஜக அரசின்கீழ் தில்லியில் நல்லாட்சி நடத்தப்படுவதாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.தில்லி தலைமை செயலகத்துக்கு வருகை தந்த பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், தில்லி முதல்வர் ரேகா குப்தா, த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி! ஒருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் புதியதாக 59 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள... மேலும் பார்க்க

ஒடிசாவில் தொடரும் காலரா! பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு!

ஒடிசாவில் காலரா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், 2 மாவட்டங்களின் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் திறப்பை ஒத்திவைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கோடைக்கால விடுமுறைகள் ம... மேலும் பார்க்க

ஏர் இந்தியா போயிங் விமானத்தில் கோளாறு! உண்மையைக் கூறிய ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்தாண்டில் லண்டனுக்கு இயக்கப்பட்ட போயிங் விமானத்தில் கோளாறு இருந்ததைச் சுட்டிக் காட்டிய, 2 விமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யபட்டதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்த... மேலும் பார்க்க