செய்திகள் :

டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! - பாகிஸ்தான் ராணுவத் தளபதி பரிந்துரை

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் வலியுறுத்தியுள்ளார்.

5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பூட்டிய அறையில் நேற்று மதிய உணவு விருந்து அளித்தார்.

இந்தச் சந்திப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், அசிம் முனீரைச் சந்திப்பதற்காகவே ஜி7 மாநாட்டில் இருந்து அதிபர் டிரம்ப் பாதியில் கிளம்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போரை தடுத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கட்டுப்பாடு, அமைதிப் பேச்சுவார்த்தை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளில் சிறந்து விளங்குவபர்களை கௌரவிப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இருநாட்டுப் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வழங்கவேண்டும் என அசிம் முனீர் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டதால் மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக வெள்ளை மாளிகையும் தெரிவித்துவருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் செல்லுமிடமெங்கும் இதுவரை கிட்டத்தட்ட 15 முறைக்கு இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாகக் கூறிவருகிறார். ஆனால், நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேசிய பிரதமர் மோடி, “யாருடைய சமரசத்தையும் இந்தியா ஏற்காது” எனத் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள், இந்த சந்திப்பில் டிரம்ப்பின் நோபல் பரிசுக்கான முக்கியத்துவத்தைவிட வேறு விஷயங்கள் இருப்பதாக கருதுகின்றனர்.

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் ராஜதந்திரங்கள் தோல்வியடைந்தால் ராணுவத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன.

இதையும் படிக்க |உ.பி. முதல் தெஹ்ரான் வரை... கொமேனியின் மூதாதையர் இந்தியர்களா? பின்னணி என்ன?

ஈரானுக்கு அமெரிக்கா அச்சுறுத்தல்! டிரம்ப்பின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கருத்துக் கணிப்பு!

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முடிவு குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு ... மேலும் பார்க்க

ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை: பாகிஸ்தான்

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் எந்தவொரு ராணுவ உதவிகளையும் கோரவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் த... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி கொலை!

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பீரங்கி எதிர்புப் படையின் தளபதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. லெபானின் தெற்குப் பகுதியிலுள்ள நபாட்டியா மாகாணத்தில், இஸ்ரேல் ராண... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாட... மேலும் பார்க்க

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து..! இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்ப... மேலும் பார்க்க