செய்திகள் :

Aadhar Card: ஆதார் கார்டு ஜெராக்ஸ் இனி தேவையில்லை; வரப்போகிறது புதிய ஆப்! | Detail

post image

டிக்கெட் முன்பதிவா... வங்கி சம்பந்தமான ஏதேனும் விஷயமா... இப்படி எந்த விஷயத்திற்கு சென்றாலும், இந்தியாவில் முதலில் கேட்கப்படும் ஆவணம் 'ஆதார்'. ஆனால், எப்போதும் ஆதார் நம் கையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்தப் பிரச்னைக்கு வரப்போகிறது ஒரு புதிய தீர்வு.

ஜெராக்ஸ் வேண்டாமே!

வரும் வாரங்களில் UIDAI புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஆப் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் உங்களது ஆதாரை சமர்ப்பிக்க முடியும்.

ஆதார்
ஆதார்

இந்த ஆப்பில் ஆதார் கியூ.ஆர் கோடு வடிவில் இருக்கும். அதை ஸ்கேன் செய்தால் ஆதாரை சமர்பித்து விட முடியும். இதனால், இனி ஆதார் காப்பிகளை எடுக்க ஜெராக்ஸ் கடைகளைத் தேடி அலைய வேண்டாம்.

ஆதார் இருவகை

ஸ்கேன் செய்து சமர்ப்பிப்பதிலும் இரு ஆப்ஷன்கள் உண்டு. ஆதார் என்பது எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அதில் நம்முடைய அனைத்து தகவல்களும் இருக்கிறது. அப்போது அதை எவ்வளவு பத்திரமாக வைத்துகொள்ள வேண்டும்? இதை எளிதாக்குவது போல, நீங்கள் ஆதாரை சமர்ப்பிக்கும் போது, அது முழுமையாக வேண்டுமா... மாஸ்க்டாக (Masked) வேண்டுமா என்று நாமே தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

மேலும், இனி வீட்டிலேயே ஆதார் அப்டேட்டுகளை சில கிளிக்குகளில் எளிதாக செய்துகொள்ளலாம். வரும் நவம்பர் முதல் பெயர், முகவரி, போன் நம்பர், பிறந்த தேதி ஆகியவற்றை உரிய சான்றுகள் கொடுத்து அப்டேட் செய்யலாம்.

கைரேகை மற்றும் கருவிழி பதிவிற்கு மட்டும் ஆதார் சென்டர்களுக்கு சென்றால் போதும்.

எதற்காக இது?

இந்த வசதி மூலம் நீண்ட நேரம் காத்திருப்பு மற்றும் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. மேலும், யாருக்கு எந்தத் தகவல் கொடுத்தல் போதும் என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம்.

``முருகனை வைத்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்; ஸ்டாலின் பக்கம்தான் முருகன்..” - சேகர் பாபு

மதுரையில் இந்து முன்னணி சார்பில் வரும் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இம்மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்... மேலும் பார்க்க

கேரளா: "பெட்ரோல் நிலைய கழிப்பறைகள் பொதுப் பயன்பாட்டுக்கு அல்ல" - அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் பெட்ரோலிய வணிகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலைய உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பானது, பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுப் பயன்பாட்டுக்கானதாக வகைப்படுத்துவதை எதிர்... மேலும் பார்க்க

``தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உதவிய முதல்வர்'' - IITக்கு தேர்வான பழங்குடியின மாணவி நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதலமைச்சர், மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வரு... மேலும் பார்க்க

"கூட்டணி பேரம் பேசுவதற்காக கட்சி நடத்தவில்லை; அதிமுகவோடு சேரலாம், ஆனால்" - திருமா சொல்வதென்ன?

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

`விவசாயி வேடமிட்டு போலியாகத் திரிகிறார் முதல்வர் ஸ்டாலின்..!' - எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழகத்தில் இந்த ஆண்டு மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும் இதில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்ட... மேலும் பார்க்க

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன... மேலும் பார்க்க