செய்திகள் :

போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: இஸ்ரேலுக்கு சீனா வலியுறுத்தல்

post image

இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது.

அணுசக்தி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்துவதாகக் கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈரான் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரான் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனா்.

அதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. ஈரானின் தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஈரான் - இஸ்ரேல் ஆதரவு நாடுகள் கூறி வருகின்றன.

ஈரான் சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய நிலையில், 'இஸ்ரேல் உடனான போரில் அமெரிக்கா தலையிட்டால், சரி செய்ய முடியாத அளவுக்கு சேதம் ஏற்படும்' என ஈரான் நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானுக்கு ஆதரவாக சீனா, இஸ்ரேல் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், "மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகள் குறிப்பாக இஸ்ரேல், மக்களின் நலன் கருதி உடனடியாக போரை நிறுத்த வேண்டும்.

இந்த போரில் அமெரிக்கா தலையிடுவதையும் அமெரிக்க படைகள் புகுவதையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.

மற்ற நாடுகளின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் எந்தவொரு செயலையும் சீனா எதிர்க்கிறது" என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு

இஸ்ரேலுக்கு சீனா, ரஷியா கண்டனம்! இரு நாட்டு அதிபர்கள் விவாதம்!

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு சீனா, ரஷியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஈரான் போரால், மத்திய கிழக்கு பகுதியில் அமைதியின்மை நிலவி வருகிறது. ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஜி7 நாட... மேலும் பார்க்க

நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் சரிந்த கட்டடங்கள்!

இஸ்ரேல் பிரதமர் செய்தியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஈரானின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது தலை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து..! இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களை வெளியேற்ற நடவடிக்கை!

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்ப... மேலும் பார்க்க

உ.பி. முதல் தெஹ்ரான் வரை... கொமேனியின் மூதாதையர் இந்தியர்களா? பின்னணி என்ன?

ஈரானின் முதல் உயர் தலைவர் அயதுல்லா ருஹோல்லா முசாவி கொமேனிக்கும் இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசத்துக்கும் தொடர்புள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான... மேலும் பார்க்க

வெறும் கீறல் மட்டுமே! ராக்கெட் வெடித்துச் சிதறிய விபத்தில் எலான் நகைச்சுவை?

அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெடித்துச் சிதறியதை நகைச்சுவையாகச் சித்திரித்து, எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட்... மேலும் பார்க்க

4கே தொழில்நுட்பத்தில் காஸாவில் நிகழும் இனப்படுகொலை..! இஸ்ரேலுக்கு எதிராகப் பேசிய நடிகர்!

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம், “இஸ்ரேல் 4கே தொழில்நுட்பத்தில் நமது கண்களின் முன்பாக காஸாவில் இனப்படுகொலை நடத்திவருகிறது” எனக் கூறியுள்ளார். இஸ்ரேல் - காஸா போர் கடந்த 2023ஆம் ஆண்... மேலும் பார்க்க