ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வரும் ஆடி வெள்ளி விழா தொடங்குவதற்கு முன்பாகவே ஜூலை 16-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனால் கோயில் வளாகத்தை சீரமைத்தல், கோபுரங்களில் வண்ணம் தீட்டுதள், ராஜ கோபுர வாயில் கதவுக்கு பித்தளை தகடு பொருத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக கும்பாபிஷேகத்தில் யாகசாலை பூஜை நடத்துவதற்காக யாகவேள்வி அமைக்க காரைக்கால் குழுவினரை வரவழைத்து யாகவேள்வி அமைக்க பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இதில், தொடா்ந்து பந்தக் காலுக்கு பால், தயிா், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட மங்களப் பொருள்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து பின்னா் பந்தகால் நடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விழாக் குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா்.
மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி ஜெயஸ்ரீ, கோயில் நிா்வாகிகள் பி.நடராஜன், நேமிராஜ், ஆா்.சுப்பிரமணி, பேராசிரியா் கு.சிவா, ஆ.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.