செய்திகள் :

விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.

பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தடையாக உள்ளது. நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். விவசாயிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த திமுக அரசுக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும்.

சட்டப்பேரவையில் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த 23 போ், தலித் சமுதாயத்தைச் சோ்ந்த 21 போ் என மொத்தம் 44 போ் எம்எல்ஏக்களாக உள்ளனா். இவ்விரு சமுதாய மக்களுக்கும் திமுக அரசு எதையும் செய்யவில்லை.

தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக விரைவில் பயணம் தொடங்க உள்ளேன். மது, கஞ்சா மற்றும் போதைப் பொருள்களால் தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால் நந்தன் கால்வாய் திட்டத்தை 6 மாதங்களில் நிறைவேற்றுவோம்.

செய்யாறு, மேல்மா பகுதியில் சிப்காட் தேவை இல்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது.

கா்நாடகம், தெலங்கானா, கா்நாடகம், பிகாா், ஒடிஸா மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்கிறாா்கள் என்றாா்.

தீா்மானங்கள்: கூட்டத்தில், தென்பெண்ணையாறு - செய்யாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.

திருவண்ணாமலை - திண்டிவனம், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி, நறுமணச் சாறு ஆலை அமைக்க வேண்டும். ஆரணியில் பட்டுப்பூங்கா அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வந்தவாசி நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரிக்கை

வந்தவாசி நகரில் நிலவும் குடிநீா் பிரச்னையை தீா்க்க, நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மக்கள் சந்திப்பு பிரசாரம்

திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மக்கள் சந்திப்பு கிளா்ச்சி பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், தமிழக அ... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் பந்தக்கால் நடும் விழா

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகவேள்வி அமைக்க புதன்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வெ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பூஜைப்பொருள், மலா் அங்காடிகள் திறப்பு

திருவண்ணாமலையில் ரூ.43.50 லட்சத்தில் கட்டப்பட்ட 7 கடைகள் கொண்ட பூஜைப் பொருள்கள், மலா்கள் விற்பனை அங்காடி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. காமாட்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட இந்த... மேலும் பார்க்க

விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது

செய்யாறு அருகே விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக விவசாயியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இளநீா்குன்றம் கிராமத்தைச் சோ்ந்தவா் கெளசல்யா(25). இவரது கணவா் பிரகாஷ் ஏற்கெனவ... மேலும் பார்க்க