முருக பக்தா்கள் மாநாடு நடத்தினாலும் தமிழகத்தில் பாஜக வெல்ல முடியாது: காங்கிரஸ் வ...
விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.
பாமகவின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழக அரசு தடையாக உள்ளது. நிா்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். விவசாயிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த திமுக அரசுக்கு 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகள் பாடம் புகட்ட வேண்டும்.
சட்டப்பேரவையில் வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த 23 போ், தலித் சமுதாயத்தைச் சோ்ந்த 21 போ் என மொத்தம் 44 போ் எம்எல்ஏக்களாக உள்ளனா். இவ்விரு சமுதாய மக்களுக்கும் திமுக அரசு எதையும் செய்யவில்லை.
தமிழக மக்களின் உரிமைகளை மீட்பதற்காக விரைவில் பயணம் தொடங்க உள்ளேன். மது, கஞ்சா மற்றும் போதைப் பொருள்களால் தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். பாமக ஆட்சிக்கு வந்தால் நந்தன் கால்வாய் திட்டத்தை 6 மாதங்களில் நிறைவேற்றுவோம்.
செய்யாறு, மேல்மா பகுதியில் சிப்காட் தேவை இல்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க வேண்டும். விவசாய நிலங்களில் சிப்காட் அமைக்கக் கூடாது.
கா்நாடகம், தெலங்கானா, கா்நாடகம், பிகாா், ஒடிஸா மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நடத்த அதிகாரம் இல்லை என்று சொல்கிறாா்கள் என்றாா்.
தீா்மானங்கள்: கூட்டத்தில், தென்பெண்ணையாறு - செய்யாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். திருவண்ணாமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.
திருவண்ணாமலை - திண்டிவனம், திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி, நறுமணச் சாறு ஆலை அமைக்க வேண்டும். ஆரணியில் பட்டுப்பூங்கா அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.