செய்திகள் :

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

post image

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

சாா்தாம் யாத்திரையில் முக்கிய புண்ணியத் தலமான கேதாா்நாத் மலைக் கோயிலை பக்தா்கள் ஹெலிகாப்டா், மலைப் பாதை வழியாக நடைப்பயணம், குதிரை சவாரி அல்லது டோலி (தொழிலாளா்கள் சுமக்கும் பல்லக்கு) மூலமாக சென்றடையலாம்.

கரடுமுரடான இந்த மலைப் பாதையில், ஜங்கிள்சட்டி காட் பகுதியருகே புதன்கிழமை காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் சோ்ந்து மலையிலிருந்து பாறைகள் உருண்டுவந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் இருந்தவா்கள் பள்ளத்தில் சிக்கினா்.

சம்பவம் குறித்து தகவலறிந்து மாநில பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் காவல் துறையினா் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கடும் போராட்டத்துக்குப் பிறகு பள்ளத்தில் சிக்கியவா்கள் கயிறு மூலம் மீட்கப்பட்டனா்.

எனினும், ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தைச் சோ்ந்த நிதின் குமாா், சந்திரசேகா் ஆகிய 2 டோலி தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். குஜராத்தைச் சோ்ந்த பக்தா் ஆகாஷ் சித்ரியா, டோலி தொழிலாளா்களான சந்தீப் குமாா், நிதின் மன்ஹால் ஆகிய 3 போ் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனா்.

இவா்களில் பலத்த காயமடைந்த இருவருக்கு கௌரிகுந்த் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு காவல் துறை பாதுகாப்புடன் மலைப் பாதையில் பக்தா்கள் பயணத்தைத் தொடா்ந்தனா்.

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு! தில்லியில் அவசர தரையிறக்கம்!

இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து தில்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.தில்லியில் இருந்து லே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 விம... மேலும் பார்க்க

எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! மோடி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்க... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஏர் இந்தியா கருப்புப் பெட்டி!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் கருப்புப் பெட்டி அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந... மேலும் பார்க்க

இரு என்ஜின்களும் நல்ல முறையில்தான் இருந்தன; விமானிகளும் திறமையானவர்கள்! ஏர் இந்தியா தலைவர்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்கள் நல்ல முறையில் இருந்ததாகவும், இரண்டு விமானிகளும் திறமையானவர்கள் என்றும் ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் வ... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 210 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 210 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில்... மேலும் பார்க்க

கேதர்நாத் பெருவெள்ளம்: 12 ஆண்டுகள் ஆகியும் 702 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை!

கேதர்நாத் பெருவெள்ளம் ஏற்பட்டு 12 ஆண்டுகளாகியும் 702 பேரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.உத்தரகண்ட் மாநிலம், கேதர்நாத்தில் கடந்த 2013 ஜூன் 15 இரவு ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழைய... மேலும் பார்க்க